செய்திகள் :

சூப்பர் ஸ்டிரைக்கர் விருதைப் பகிர்ந்துகொண்ட மும்பை வீரர்கள்..! ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை!

post image

ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக இரு வீரர்கள் சூப்பர் ஸ்டிரைக்கர் விருதைப் பகிர்ந்துகொண்ட நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் போட்டியின் 50-ஆவது ஆட்டத்தில் (மே.1) மும்பை இந்தியன்ஸ் அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி அபார வெற்றி கண்டது.

முதலில் பேட் செய்த மும்பை 20 ஓவா்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 217 ரன்கள் சோ்க்க, ராஜஸ்தான் 16.1 ஓவா்களில் 117 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்தப் போட்டியில் மும்பை அணியின் வீரர் சூர்யகுமார் யாதவ் 23 பந்துகளில் 48 ரன்கள் (4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்) அடித்தார்.

மற்றுமொரு மும்பை பேட்டர் ஹார்திக் பாண்டியாவும் 23 பந்துகளில் 48 ரன்கள் (6 பவுண்டரிகள், 1 சிக்ஸர்) அடித்து அசத்தினார்.

இருவருமே 208.70 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடினார்கள். இருவருக்கும் சூப்பர் ஸ்டிரைக் ரேட் விருது பகிர்ந்தளிக்கப்பட்டது.

ஐபிஎல் வரலாற்றில் இதுமாதிரி முதல்முறையாக நடந்துள்ளதாக மும்பை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.

பிரபலமான ஸ்பைடர்மேன் உடன் ஒப்பிட்டு இருவரும் மகிழ்ச்சியாக செய்ததை மும்பை இந்தியன்ஸ் அணி விடியோவாக வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் இந்த அளவுக்கு வளருமென ஒருபோதும் நினைக்கவில்லை: விராட் கோலி

ஐபிஎல் தொடரின் வளர்ச்சி குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் விராட் கோலி பேசியுள்ளார்.ஐபிஎல் தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, இதுவரை 17 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டு... மேலும் பார்க்க

ஐபிஎல் தொடரில் தனது வெற்றிக்கான ரகசியம் பகிர்ந்த பிரசித் கிருஷ்ணா!

ஐபிஎல் தொடரில் வெற்றிகரமாக செயல்படுவதற்கான ரகசியத்தை குஜராத் டைட்டன்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா பகிர்ந்துள்ளார்.நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி சிறப்பாக விளையாடி வருகி... மேலும் பார்க்க

சச்சின் சாதனையை முறியடித்த தமிழன்..! சாய் சுதர்சனுக்கு குவியும் வாழ்த்துகள்!

ஐபிஎல் தொடரில் சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்சனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.நடப்பு ஐபிஎல் சீசனில் மட்டும... மேலும் பார்க்க

மிடில் ஆர்டரில் அதிரடி..! மனம் திறந்த ஆர்சிபி வீரர்!

ஆர்சிபி வீரர் தேவ்தத் படிக்கல் தனது அதிரடியான பேட்டிங் குறித்து பேட்டியளித்துள்ளார். இந்தாண்டு தொடர்ச்சியாக நம்.3 இடத்தில் தேவ்தத் படிக்கல் களமிறங்குகிறார். விராட் கோலி தொடக்க வீரராக மாறியதால் இந்த இட... மேலும் பார்க்க

நடுவர்களுடன் வாக்குவாதம் ஏன்? ஷுப்மன் கில் விளக்கம்!

சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் நடுவருடன் ஷுப்மன் கில் வாகுவாதம் செய்தது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. அகமதாபாத் திடலில் நடந்த நேற்றைய (மே.2) போட்டியில் முதலில் குஜராத் 20 ஓவா்களில் 224/6 ரன... மேலும் பார்க்க

வென்றது குஜராத்; வெளியேறியது ஹைதராபாத்

ஐபிஎல் போட்டியின் 51-ஆவது ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் 38 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாதை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது. முதலில் குஜராத் 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 224 ரன்கள் எடு... மேலும் பார்க்க