செய்திகள் :

சூறாவளி தாக்கிய அமெரிக்க மாகாணத்தில் காட்டுத் தீ! மக்கள் வெளியேற்றம்!

post image

அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் அப்பகுதியுள்ள குடிமக்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

வட கரோலினா மாகாணத்தின் போல்க் கவுண்டி, அதன் அருகிலுள்ள புர்கே மற்றும் மேடிசன் ஆகிய மூன்று கவுண்டிகளிலும் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அம்மாகாணத்தின் வட எல்லையில் விர்ஜீனியா மாகாணத்தின் அருகிலுள்ள ஸ்டோக்ஸ் கவுணிடியின் வனப்பகுதியிலும் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வட கரோலினா பொது பாதுகாப்புத் துறை நேற்று (மார்ச் 22) இரவு 8.20 மணியளவில் அம்மாகாணத்தின் மேற்கு பகுதியிலுள்ள போல்க் கவுண்டியின் குடியிருப்பு வாசிகள் வெளியேற உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அவர்களது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், காட்டுத் தீ ஏற்பட்டுள்ள பகுதிகளின் தெரிவுநிலை குறைந்து வருவதினால் அங்குள்ள மீட்புப் பாதைகள் முடக்கப்படக்கூடிய அபாயமுள்ளது எனவே அப்பகுதி குடியிருப்பு வாசிகள் உடனடியாக வெளியேறவில்லை என்றால் அங்கேயே சிக்கிக்கொண்டு உங்களது உடலுக்கும் உயிருக்கும் ஆபத்து ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிக்க: போருக்கு எதிராக ஐரோப்பிய நாடுகளில் வலுக்கும் போராட்டம்!

மேலும், கொலம்பஸ் பகுதியில் குடியிருப்பு வாசிகள் தங்குவதற்கு கூடாரங்கள் நிறுவப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 2024 செப்டம்பரில் வட கரோலினா மாகாணத்தின் மேற்கு பகுதியில் ஹெலீன் சூறாவளி தாக்கியதில் அங்குள்ள முக்கிய நகரங்களில் கடும் வெள்ளம் ஏற்பட்டு பெரும்பாலான உள்நாட்டு பாதைகளில் 2025 மார்ச் மாதம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.

இத்துடன், அந்த சூறாவளியால் அம்மாகாணத்தின் 8,046 கி.மீ. நீளத்திற்கு உள்நாட்டு சாலைகள் சேதமடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒடிசாவில் 5 ஆண்டுகளில் மின்னல் பாய்ந்து 1,418 பேர் பலி!

ஒடிசா மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மின்னல் பாய்ந்து 1,418 பேர் பலியாகியுள்ளனர். ஒடிசாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2025 வரையிலான 5 ஆண்டுகளில் மின்னல் பாய்ந்து 1,418 பேர் பலியானதாக அம்மாநில வருவாய்... மேலும் பார்க்க

ஆப்கனில் தொடர் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 5.2 ஆகப் பதிவு!

ஆப்கானிஸ்தான் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் நிலப்பரப்பிலிருந்து சுமார் 160 கி.மீ. ஆழத்தில் இன்று (மார்ச் 27) காலை 8.38 மணியளவில் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது பதிவாகி... மேலும் பார்க்க

சென்னை எழும்பூர் ரயில் நிலைய அலுவலகத்தில் தீ விபத்து!

சென்னை எழும்பூர் ரயில் நிலைத்தில் உள்ள அலுவலகக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலைத்தில் உள்ள அலுவலகக் கட்டடத்தில் முதல் மாடியில் இன்று(மார்ச் 27) ப... மேலும் பார்க்க

சிலி அதிபர் இந்தியா வருகை!

சிலி நாட்டு அதிபர் 5 நாள் பயணமாக இந்தியா வருகின்றார். பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று தென் அமெரிக்க நாடான சிலியின் அதிபர் கேப்ரியல் போரிக் ஃபொண்ட் 5 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வருவதாக இந்... மேலும் பார்க்க

'இபிஎஸ் அவராகவே பதவி விலக வேண்டும்; இல்லையென்றால்...' - ஓபிஎஸ் எச்சரிக்கை!

அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி அவராகவே பதவி விலக வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அமமுக சார்பில் சென்னை எழும்பூரில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு த... மேலும் பார்க்க

அடையாளத்தின் அடிப்படையில் 6 பயணிகள் சுட்டுக்கொலை! பிரதமர் கண்டனம்!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் மர்ம கும்பலின் துப்பாக்கிச் சூட்டில் 6 பயணிகள் கொல்லப்பட்டுள்ளனர். பலூசிஸ்தானின் குவடார் மாவட்டத்தின் கலாமத் பகுதியில் நேற்று (மார்ச் 26) நள்ளிரவு கராச்சியிலிருந்த... மேலும் பார்க்க