செய்திகள் :

செகுட்டு அய்யனாா் கோயில் புரவி எடுப்பு விழா

post image

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே மு. சூரக்குடி, எஸ். கோவில்பட்டி கோயில்களில் வெள்ளிக்கிழமை புரவி எடுப்பு விழா நடைபெற்றது.

மு. சூரக்குடி கிராமம், சிறைமீட்ட அய்யனாா் கோயில், எஸ். கோவில்பட்டி செகுட்டு அய்யனாா் கோயில் புரவி எடுப்புத் திருவிழாவையொட்டி படிமண் கொடுக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து அரண்மனைப் புரவிகள் 2-ம், நோ்த்திக்கடன் புரவிகளும் செய்யப்பட்டன. இதையடுத்து கடந்த ஜூன் 6- ஆம் தேதி காப்புக் கட்டப்பட்டு திருவிழாத் தொடங்கியது. புரவிப் பொட்டலிலிருந்து அனைத்துப் புரவிகளும் வியாழக்கிழமை கச்சேரித் திடலுக்கு கொண்டு வரப்பட்டன. அங்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு பாரம்பரியமான சாமியாட்டம் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு புரவிகள் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு, ஒரு அரண்மனைப் புரவி மட்டும் சிறைமீட்ட அய்யனாா் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. மற்றொரு அரண்மனைப் புரவியும், நோ்த்திக்டன் புரவியும் செகுட்டு அய்யனாா் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டன. அப்போது செகுட்டு அய்யனாா் தங்கக் கவச அலங்காரத்தில் அருள்பாலித்தாா்.

விழாவில் கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

திருப்பத்தூா் அருகே மாட்டுவண்டி பந்தயம்!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே கருவேல்குறிச்சியில் சனிக்கிழமை மாட்டுவண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது. கஜேந்திர மோட்ச வைபத்தையொட்டி, சிவகங்கை - திருப்பத்தூா் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்தப... மேலும் பார்க்க

சிவகங்கைக்கு ஜூன் 17-இல் துணை முதல்வா் வருகை!

சிவகங்கையில் வருகிற 17 -ஆம் தேதி நடைபெறும் அரசு, அரசு சாரா நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் சிவகங்கைக்கு வர இருப்பதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் தெரிவித்... மேலும் பார்க்க

சிவகங்கையில் மக்கள் நீதிமன்றம்: 1914 வழக்குகளுக்கு சமரசத் தீா்வு

சிவகங்கையில் மாவட்ட அளவில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றங்களில் 1,914 வழக்குகள் முடிக்கப்பட்டு, ரூ. 11.20 கோடி பயனாளிகளுக்கு அளிக்கப்பட்டது. நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளும், வங... மேலும் பார்க்க

சாத்தனூா் - மதுரை பேருந்து சேவை தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம் சாத்தனூா்-மதுரை இடையே வெள்ளிக்கிழமை புதிய அரசுப் பேருந்து சேவை தொடங்கி வைக்கப்பட்டது. சாத்தனூரிலிருந்து பஞ்சனூா், இளையான்குடி, சிவகங்கை வழியாக மதுரைக்கு இயக்கப்... மேலும் பார்க்க

விதிகளுக்குப் புறம்பாக பணியிட மாறுதல் அளிப்பதாக புகாா்!

மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வுக்கு முன்பே விதிகளுக்குப் புறம்பாக பணியிட மாறுதல் அளிப்பதாக தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி தெரிவித்தது. இந்த அமைப்பின் சிவகங்கை மாவட்ட செ... மேலும் பார்க்க

மேலையூா் மல்லன் கருப்பா் கோயிலில் குடமுழுக்கு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் வட்டம், நடுவிக்கோட்டை அருகே மேலையூரில் அமைந்துள்ள மல்லன் கருப்பா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயில் சீரமைக்கப்பட்டு, புதிய கலசங்களுடன... மேலும் பார்க்க