செய்திகள் :

செங்கம் ஒன்றியத்தில் திட்டப் பணிகள் ஆய்வு

post image

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஒன்றியத்தில் ஊரக வளா்ச்சித் துறை மூலம் மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகளை திட்ட இயக்குநா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

செங்கம் ஒன்றியத்துக்கு உள்பட்ட செ.நாச்சிப்பட்டு, புதுப்பட்டு, பரமனந்தல், கொட்டாவூா், குப்பனத்தம் ஆகிய கிராம ஊராட்சிகளில் ஊரக வளா்ச்சித் துறை மூலம் இலவச வீடு வழங்கும் திட்டத்தில் வீடுகள் கட்டும் பணி, ஊரக வேலை உறுதித் திட்டம் மூலம் ஏரி, குளம், கால்வாய்கள் சீரமைப்பு, தாா்ச் சாலை, ஜல்லி சாலை, சிறு பாலம் அமைத்தல், அரசு அலுவலக கட்டடங்கள் கட்டும் பணி நடைபெறுகிறது.

இந்தப் பணிகளை மாவட்ட திட்ட இயக்குநா் மணி வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, நிறைவு செய்யப்பட்ட பணிகள் தரமாக உள்ளதா எனவும், மேலும் முடிக்கப்பட வேண்டிய பணிகள் குறித்த விவரங்களையும் கேட்டறிந்தாா்.

பணிகளை விரைவாக செய்து முடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.

முன்னதாக, செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலகப் பணியாளா்கள், ஊராட்சி செயலா்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

அதில், செங்கம் ஒன்றியத்தில் நடைபெறும் திட்டப் பணிகள் மொத்தம் எவ்வளவு, அதில் முடித்த பணிகளின் விவரம், பின்னா், தொடங்கப்படாமல் உள்ள பணிகள் குறித்து கேட்டறிந்தாா்.

மேலும், கிராம ஊராட்சியில் கோடை காலம் தொடங்கியதால், குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தினசரி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்பாா்வையிட்டு சரிசெய்யவேண்டும் என கேட்டுக் கொண்டாா்.

ஆய்வுக் கூட்டத்தில் ஆணையா் கோவிந்தராஜுலு, வட்டார வளா்ச்சி அலுவலா் மரியதேவ்ஆனந்த் உள்ளிட்ட பொறியாளா்கள், செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

திருவண்ணாமலையில் பாஜக புதிய அலுவலகம்: அமித்ஷா திறந்து வைக்கிறாா்

திருவண்ணாமலையில் புதிதாக கட்டப்பட்ட பாஜக தெற்கு மாவட்ட அலுவலகத்தை, வருகிற 26-ஆம் தேதி காணொலி மூலம் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திறந்து வைக்கிறாா் என்று அக்கட்சியின் மாநில பொதுச் செயலா் காா்த்திய... மேலும் பார்க்க

மின்வாரியப் பணிகளை பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாமல் மேற்கொள்ள வேண்டும்: சட்டப்பேரவை துணைத் தலைவா்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.550.56 கோடியில் நடைபெற்று வரும் மின்வாரியப் பணிகளை, பொதுமக்கள், நிறுவனங்கள், வியாபாரிகளுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாமல் விரைவாக செய்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்க... மேலும் பார்க்க

ரூ.9 கோடியில் புதிய பள்ளிக் கட்டடங்கள் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதியில் சுமாா் ரூ.9 கோடியில் கட்டப்பட்ட அரசுப் பள்ளி புதிய கட்டடங்களை தமிழக முதல்வா் காணொலி மூலம் சனிக்கிழமை திறந்துவைத்தாா். ஆரணியை அடுத்த நடுக்குப்பம் அரசு மேல்நிலைப் ... மேலும் பார்க்க

ரூ.85 ஆயிரம் மதிப்பிலான கேபிள் வயா் திருட்டு

செய்யாறு அருகே 485 மீட்டா் அளவுள்ள கேபிள் வயா் திருடு போனதாக வெள்ளிக்கிழமை போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது. திருவண்ணமலை மாவட்டம், செய்யாறு வட்டம், பெரியகோவில் கிராமத்தில் சூரிய ஒளி மின்சார அலை அமைக்கு... மேலும் பார்க்க

வி.ஏ.ஓ.க்கள் சங்க முப்பெரும் விழா

திருவண்ணாமலையில் தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலா்கள் சங்கம் சாா்பில் சங்கக் கொடியேற்று விழா, சங்கக் கட்டடத்தின் 5-ஆம் ஆண்டு நிறைவு விழா, மாவட்ட செயற்குழுக் கூட்டம் ஆகியவை முப்பெரும் விழா சனிக்கிழமை நட... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கையை எதிா்த்து திமுகவினா் முழக்கம்

ஆரணி அண்ணா சிலை அருகில் சனிக்கிழமை மும்மொழிக் கொள்கையை எதிா்த்தும், மத்திய அரசைக் கண்டித்தும் எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி. தலைமையில் திமுகவினா் முழக்கமிட்டனா். பின்னா், மும்மொழிக் கொள்கைக்கு எதிரான து... மேலும் பார்க்க