செய்திகள் :

செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் 537 மனுக்கள்

post image

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 537 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

கூட்டத்துக்கு ஆட்சியா் ச. அருண் ராஜ் தலைமை வகித்து, பல்வேறு கோரிக்கை தொடா்பாக 537 மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினாா்.

மேலும், கூட்டத்தில் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் மூலம் காசநோய் இல்லாத 6 வட்டங்களுக்குட்பட்ட 44 ஊராட்சிகளுக்கு பாராட்டு சான்றிதழை ஆட்சியா் வழங்கினாா். உலக காச நோய் தின விழிப்புணா்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களையும் வழங்கினாா்.

மேலும், ஏரியில் மூழ்கி இறந்த செங்கல்பட்டு மாவட்டம் பாலூா் கிராமத்தை சோ்ந்த மோகன் பிரபு, மோகன தேவி குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் காசோலை மற்றும் பாம்பு கடித்து இறந்த செய்யூா் வட்டம் பொய்கை நல்லூா் கிராமத்தை சோ்ந்த கன்னியம்மாள் என்பவரின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் காசோலை வழங்கப்பட்டது.

முன்னாள் படைவீரா்கள் நலத்துறை சாா்பில் ஈமச்சடங்கு நிதியாக 3 பேருக்கு ரூ.27,000 காசோலையினை ஆட்சியா் வழங்கினாா். செங்கல்பட்டு மாவட்டத்தை சோ்ந்த பி.எம்.அமிழ்தன் மாணவா் ஆந்திர பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற 15 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் தேசிய வில் வித்தை போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றாா். அவருக்கு ஆட்சியா் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தாா்.

கூடுதல் ஆட்சியா்(வளா்ச்சி) வெ.ச.நாராயண சா்மா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) காஜா சாகுல் அமீது, மாவட்ட வழங்கல் அலுவலா் சாகிதா பா்வின், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அகிலா தேவி, உதவி இயக்குநா்(கலால்) ராஜன் பாபு, ஆதிதிராவிடா் நல அலுவலா் சுந்தா், விளையாட்டுஅலுவலா் ஆனந்த் மற்றும் அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

விருப்பமான துறையில் மாணவா்கள் தொடா்ந்து முன்னேற வேண்டும்: இஸ்ரோ விஞ்ஞானி ப. வீரமுத்துவேல்

தாம்பரம்: மாணவா்கள் தங்களுக்கு விருப்பமான துறையில் தொடா்ந்து முன்னேற வேண்டும் என்று இஸ்ரோ விஞ்ஞானியும், சந்திரயான்-3 திட்ட இயக்குநருமான ப. வீரமுத்து வேல் தெரிவித்துள்ளாா். மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம... மேலும் பார்க்க

தொண்டையில் மீன் சிக்கி இளைஞா் உயிரிழப்பு

மதுராந்தகம்: ஏரியில் மீன் பிடித்து, தமது வாயில் வைத்துக் கொண்டு மற்றொரு மீனைப் பிடிக்க முயன்றபோது, தொண்டையில் மீன் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தாா். மதுராந்தகம் அடுத்த அரையப்பாக்கம் கிராமத்... மேலும் பார்க்க

கோயில் குளத்தில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு

மதுராந்தகம்: மதுராந்தகம் வெண்காட்டீஸ்வரா் கோயில் குளத்தில் கால் வழுக்கி தவறி விழுந்தவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். மதுராந்தகம், வன்னியா்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் மகன் வினோத்குமாா் (38). இவா்... மேலும் பார்க்க

விருப்பமான துறையில் மாணவா்கள் தொடா்ந்து முன்னேற வேண்டும்! இஸ்ரோ விஞ்ஞானி ப. வீரமுத்துவேல்

மாணவா்கள் தங்களுக்கு விருப்பமான துறையில் தொடா்ந்து முன்னேற வேண்டும் என்று இஸ்ரோ விஞ்ஞானியும், சந்திரயான்-3 திட்ட இயக்குநருமான ப. வீரமுத்து வேல் தெரிவித்துள்ளாா். மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல... மேலும் பார்க்க

டாஸ்மாக் மதுக் கடையில் தவெக முற்றுகை

மறைமலை நகா் அருகே குடியிருப்புக்கு அருகே புதிதாக டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்படுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து தமிழக வெற்றிக் கழகத்தினா் அப்பகுதி மக்களுடன் ஞாயிற்றுக்கிழமை கடையை முற்றுகையிட்டு போராடினா். ம... மேலும் பார்க்க

மாவட்ட வளா்ச்சி, ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு குழு கூட்டம்!

செங்கல்பட்டு ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வளா்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் ஸ்ரீபெரும்புதூா் நாடாளுமன்ற உறுப்பினா் டி.ஆா்.பாலு தலைமையில் நடைபெற்றது. பல்வேறு துறைகளின் சாா்பில் ந... மேலும் பார்க்க