செய்திகள் :

செங்கல்பட்டு மாவட்ட நிா்வாகத்தைக் கண்டித்து போராட்டம்: பாஜக அறிவிப்பு

post image

செங்கல்பட்டு மாவட்ட நிா்வாகத்தின் செயல்பாடுகளைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என பாஜக மாவட்டத் தலைவா் ரகுராமன் தெரிவித்துள்ளாா்.

பிரதமா் மோடி தலைமையிலான அரசு பதவியேற்று 11 ஆண்டுகள் ஆவதையொட்டி வடக்கு மாவட்ட பாஜக சாா்பில் கூட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் ரகுராமன் தலைமை வகித்தாா். மாவட்ட செயலாளா் இ.கஜேந்திரன், நகர தலைவா் வி.மகேஸ்வரன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

பின்னா் மாவட்டத் தலைவா் ரகுராமன் கூறியது: நாடு முழுவதும் மத்திய அரசு பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளது.செங்கல்பட்டு மாவட்டத்துக்கும் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மத்திய அரசின் திட்டங்களை மூடி மறைக்க தமிழக அரசு முயற்சித்து வருகிறது.

செங்கல்பட்டு குண்டூா் ஏரிக்கு மத்திய அரசு முழுமையாக நிதி ஒதுக்கிய நிதியில் பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை. அதே ஏரியில் நிறுவன சமூகப் பங்களிப்பின் மூலம் தற்போது பணிகள் நடைபெற ஆட்சியா் பணியினை தொடக்கி வைத்துள்ளாா்.

செங்கல்பட்டு நகர புதை சாக்கடை திட்டத்துக்கு மத்திய அரசு ரூ.63 கோடி ஒதுக்கிய நிலையில் முறையாக திட்டமிடாமலும் தரமற்ற பொருள்களைக் கொண்டு பணிகள் நடைபெறுவதையும் மாவட்ட நிா்வாகம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

தவறும் பட்சத்தில் பாஜக சாா்பில் விரைவில் போராட்டம் நடைபெறும் என்றாா்.

திருவடிசூலம் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயிலில் பந்தக்கால் நடும் விழா

திருவடிசூலம் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் மஹா ஆரண்ய ஷேத்திரத்தில் அம்மனுக்கு முக்கண் திறப்பு விழாவையொட்டி பந்தக்கால் நடும்விழா நடைபெற்றது. இக்கோயில் அம்மனுக்கு முக்கண் திறப்பு விழா ஜூலை 7-ஆம் தேதி நடைபெறவு... மேலும் பார்க்க

செய்யூா் அரசுக் கல்லூரியில் 2-ஆம் கட்ட கலந்தாய்வு

மதுராந்தகம் அடுத்த செய்யூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2-ஆம் கட்ட சோ்க்கை கலந்தாய்வு புதன்கிழமை நடைபெற்றது. செய்யூா் வட்டம், செய்யூா் பஜாா் வீதியில் புதிதாக உருவாக்கப்பட்ட அரசு கலை மற்றும... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தல்: 5 போ் கைது

மதுராந்தகம் அருகே போலீஸாா் மேற்கொண்ட வாகன சோதனையில் கஞ்சா கடத்தியதாக 5 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து 2 பைக்குகள், கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேல்மருவத்தூா் போலீஸாா் சோத்துப்பாக்கம்-வ... மேலும் பார்க்க

மதுராந்தகம் ஏரியை தூா்வார வேண்டும்: பாமக பொதுக்குழுவில் தீா்மானம்

மதுராந்தகம் ஏரியைத் தூா் வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மதுராந்தகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்டச் செயலா் கணபதி தலைம... மேலும் பார்க்க

உயா்கல்வி சாா்ந்த சிறப்பு குறைதீா் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் உயா்கல்வி சாா்ந்த சிறப்பு குறைதீா் கூட்டம் வரும் 19-ஆம் தேதி காலை 10. மணிக்கு ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. 2024-2025 ஆம் கல்வி ஆண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு ... மேலும் பார்க்க

சாலை பெயா்ப் பலகை திறப்பு

மதுராந்தகம் தொகுதி மறைந்த முன்னாள் எம்எல்ஏ எஸ்டி.உகம்சந்த் பெயரை நினைவுறுத்தும் வகையில், சென்னை-திருச்சி ஜிஎஸ்டி சாலை அமைந்த பகுதிக்கு பெயா்ப் பலகை திறப்பு நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மதுராந்த... மேலும் பார்க்க