செய்திகள் :

செங்கல்பட்டு: 89.82% தேர்ச்சி; மாநிலத்தில் 35 வது இடம்!

post image

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் செங்கல்பட்டு மாவட்டத்தின் தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளன.

செங்கல்பட்டு மாவட்டத்தைப் பொருத்தவரை 363 பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 79 பள்ளிகளில் மாணவர்கள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இம்மாவட்டத்தில் 15,192 மாணவர்களும் 14,927 மாணவிகளும் தேர்வு எழுதினர். இதில் 13,125 மாணவர்களும், 13,927 மாணவிகளும் மொத்தம் 27052 மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் 89. 82 ஆக உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் 35 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 33-வது இடத்தில் இருந்த செங்கல்பட்டு மாவட்டம் இந்த முறை 35-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்ட அரசு பள்ளியின் நிலை என்ன?

செங்கல்பட்டு மாவட்டத்தில் 146 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 14 அரசுப் பள்ளிகள் மட்டுமே 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

அரசுப் பள்ளியின் தேர்ச்சி 84.15 சதவீதமாக உள்ளது. கடந்த ஆண்டு அரசுப் பள்ளியின் தேர்ச்சி 79 சதவீதமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் சற்று அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவீத அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டம் 35 வது இடத்தை பிடித்து இருக்கிறது. கடந்தாண்டு 36-வது இடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவு: சென்னையில் தேர்ச்சி விகிதம் குறைவு!

பாகிஸ்தான் ஆதரவாளர்கள் தமிழராக இருப்பதற்கு அருகதை அற்றவர்கள்: நயினார் நாகேந்திரன்

ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைப் பாராட்டி, தமிழக பாஜக பேரணி நடத்தியது.ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடவடிக்கை வெற்றியைத் தொடர்ந்து, அதனைப் பாராட்டும் விதமாகவும், உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும்... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர் திட்டத்தில் முறைகேடு? செல்வப்பெருந்தகை மீதான வழக்கு மே 21-க்கு ஒத்திவைப்பு!

தூய்மைப் பணியாளர்களுக்கான திட்டத்தில் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை முறைகேட்டில் ஈடுபட்டதாகத் தொடரப்பட்ட வழக்கு மே 21 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.தூய்மைப் பணியாளர்களுக்கான திட்டத்தில் முறைகேடு... மேலும் பார்க்க

தமிழகத்தில் அநேக இடங்களில் இரவு 10 மணி வரை பலத்த மழைக்கு வாய்ப்பு!

சென்னை: தமிழகத்தில் 32 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர்காஞ்சிபுரம்விழுப்புரம்கடலூர்திருச்சிஅரியலூர்பெரம்பலூர்தஞ... மேலும் பார்க்க

மே 29, 30-ல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

சென்னையில் மே 29, 30-ல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இ... மேலும் பார்க்க

மதுரையில் மழை! தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்கிறது?

கோடை வெய்யில் கொளுத்திவந்த நிலையில், இன்று பிற்பகலில் மதுரையில் பரவலாக மழை பெய்துள்ளது. மேலும் பார்க்க

ஊட்டத்தூர் கோயிலில் முதலாம் பராந்தக சோழனின் கல்வெட்டு கண்டெடுப்பு!

ஊட்டத்தூர் சுத்தரத்தனேசுவர் கோயிலில் முதலாம் பராந்தக சோழனின் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் ஊட்டத்தூர் சுத்தரத்தனேசுவர் கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை சுற்றுலா, பண்பாடு மற்... மேலும் பார்க்க