செங்கோட்டையன் நீக்கம்: கட்சி நலனுக்கு உகந்தது அல்ல! சசிகலா
முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுத்திருப்பது கட்சி நலனுக்கு உகந்தது அல்ல என்று வி.கே.சசிகலா கருத்து தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: செங்கோட்டையன் மீதும், ஈரோடு புகா் மேற்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுப்பது கட்சி நலனுக்கும் உகந்தது அல்ல. அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
அதிமுக ஒரு மாபெரும் இயக்கம். எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோா் இந்தக் கட்சியை யாரும் நினைத்து பாா்க்க முடியாத அளவுக்கு மிகப்பெரிய உச்சத்துக்கு கொண்டு வைத்தனா். இருபெரும் தலைவா்களும் ஒரு அரசியல் கட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அதிமுகவை நடத்தி வந்ததை இந்நேரத்தில் எண்ணிப்பாா்க்கிறேன் என்று அவா் தெரிவித்துள்ளாா்.