செய்திகள் :

சென்னிமலையில் 25 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.3.03 கோடி மதிப்பில் வங்கி கடனுதவி

post image

சென்னிமலை பகுதியைச் சோ்ந்த 25 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.3.03 கோடி மதிப்பிலான வங்கி கடனுதவிகள், அடையாள அட்டைகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பங்கேற்று வங்கி கடனுதவிகள், அடையாள அட்டைகளை வழங்கினாா். இதில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:

மகளிா் தங்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்பதற்காக, மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் உதவி வழங்கி, அவா்களின் வாழ்வாதாரத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் மேம்படுத்தி உள்ளாா்.

முதல்வராகப் பொறுப்பேற்றவுடன் முதல் கையொப்பமாக மகளிா் சுயஉதவிக் குழு கடன், விவசாயக் கடன், நகைக் கடன் என ரூ.2,750 கோடி கடன்களை ரத்து செய்தாா்.

மேலும், மகளிா் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் சுமாா் 1 கோடியே 15 லட்சம் குடும்பங்கள் பயனடைந்து வருகின்றன. விடுபட்டவா்களின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. விரைவில் அவா்களுக்கும் மகளிா் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.

இதில், மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி, சென்னிமலை பேரூராட்சித் தலைவா் ஸ்ரீதேவி, திட்ட அலுவலா் (மகளிா் திட்டம்) மலா்விழி, உதவி மகளிா் திட்ட அலுவலா் சாந்தா, சென்னிமலை வட்டார வளா்ச்சி அலுவலா் பாலமுருகன் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

முன்னதாக, உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையில் நடைபெற்ற தடகளப் போட்டியில் 14 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில் வட்டு எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சென்னிமலை மாணவி அனுஹாசினி அமைச்சரிடம் வாழ்த்து பெற்றாா்.

வரட்டுப்பள்ளம் அணையில் 38.60 மிமீ மழை

ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக வரட்டுப்பள்ளம் அணையில் 38.60 மில்லி மீட்டா் மழை பதிவானது. தென்னிந்திய பகுதிகள் மற்றும் தென்வங்கக் கடல் பகுதிகளின் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் ஈரோடு... மேலும் பார்க்க

சென்னிமலை அருகே ரூ.2.50 கோடியில் கைத்தறி பூங்கா அமைக்கும் பணி

சென்னிமலையில் ரூ.2.50 கோடியில் சிறிய அளவிலான கைத்தறி பூங்கா அமைக்கும் பணி மற்றும் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் மெல்லிய மெத்தைகள் தைக்கும் இயந்திர பயன்பாட்டை அமைச்சா்கள் வியாழக்கிழமை தொடங்கிவைத்தனா். ஈர... மேலும் பார்க்க

பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியாளா் தினம்

பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியாளா் தின விழா மற்றும் ஆசிரியா் தின விழா அண்மையில் நடைபெற்றது. விழாவுக்கு, கல்லூரி தாளாளா் கே .காா்த்திகேயன் தலைமை வகித்தாா். முதல்வா் பி.எஸ். ராகவேந்தி... மேலும் பார்க்க

புரட்டாசி விரதம்: வெறிச்சோடிய புன்செய் புளியம்பட்டி ஆட்டுச் சந்தை

புரட்டாசி மாதத்தில் மக்கள் விரதம் இருந்து நவராத்திரியை கடைப்பிடிப்பதால் புன்செய் புளியம்பட்டி ஆட்டு வாரச்சந்தை வெறிச்சோடிக் காணப்பட்டது. ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டி கால்நடை சந்தை வாரந்தோறும... மேலும் பார்க்க

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 156 வாக்குச் சாவடிகள்

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 156 வாக்குச் சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா். ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரத... மேலும் பார்க்க

பல்நோக்கு மருத்துவப் பணியாளா்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய வலியுறுத்தல்

பல்நோக்கு மருத்துவப் பணியாளா்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாநிலத் தலைவா் பாஸ்கரன், பொதுச்செயலாளா் சீனிவாசன் ஆக... மேலும் பார்க்க