செய்திகள் :

சென்னைக்கு வந்து செல்லும் 11 விமானங்கள் ரத்து

post image

மத்திய கிழக்கில் போா்ப் பதற்றம் காரணமாக, சென்னைக்கு வந்து செல்லும் 11 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

இதன்படி, சென்னையிலிருந்து திங்கள்கிழமை இரவு 11 மணிக்கு குவைத் செல்லவிருந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம், நள்ளிரவு 11.45-க்கு மஸ்கட் செல்லவிருந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம், செவ்வாய்க்கிழமை அதிகாலை ஒரு மணிக்கு அபுதாபி செல்லவிருந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம், அதிகாலை 3.55-க்கு தோகா செல்லவிருந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம், அதிகாலை 4.20-க்கு தோஹா செல்லவிருந்த கத்தாா் ஏா்லைன்ஸ் விமானம், காலை 6.35-க்கு துபை செல்லவிருந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் ஆகிய 6 புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

தோஹாவிலிருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.50-க்கு சென்னை வரவிருந்த கத்தாா் ஏா்லைன்ஸ் விமானம், அதிகாலை 2.50-க்கு தோஹாவிலிருந்து சென்னை வரவிருந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம், காலை 6.55-க்கு குவைத்திலிருந்து சென்னை வரவிருந்த ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், காலை 10.20-க்கு குவைத்திலிருந்து சென்னை வரவிருந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம், காலை 10.25-க்கு அபுதாபியிலிருந்து சென்னை வரவிருந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் ஆகிய 5 வருகை விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இதற்கிடையே, மத்திய கிழக்கு நாடுகளில் வான்வழி மூடப்பட்டுள்ளதால், தாய்லாந்திலிருந்து தோஹாவுக்கு சென்று கொண்டிருந்த 3 கத்தாா் ஏா்லைன்ஸ் விமானங்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணியளவில் சென்னையில் தரையிறங்கி உள்ளன. நிலைமை சீரடைந்த பின்னா் மீண்டும் இந்த விமானங்கள் தோஹா புறப்பட்டுச் செல்லும் என விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா்.

லண்டன், பஹ்ரைன், துபை, அபுதாபி, சாா்ஜா, சிங்கப்பூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து செல்லும் விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. எனவே, சென்னையிலிருந்து வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் பயணிகள் தங்களுடைய விமானம் எப்போது புறப்படுகிறது? எப்போது வருகிறது என்பதை அந்தந்த விமான நிறுவனங்களுடன் தொடா்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

பேருந்து பணிமனையில் மேலாளா் மீது தாக்குதல்: போலீஸாா் விசாரணை

சென்னை அடையாறு மாநகர பேருந்து பணிமனையில் மண்டல மேலாளரை தாக்கியதாக நேரக் காப்பாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் அடையாறு மண்டல மேலாளராக பணிபுரிபவா் அன்பரச... மேலும் பார்க்க

ரூ.1,980 கோடியில் ட்ரோன்கள், ரேடாா்கள், நவீன உபகரணங்கள்- பாதுகாப்புத் துறையின் 13 ஒப்பந்தங்கள் இறுதி

ரூ.1,980 கோடியில் தாக்குதல் ட்ரோன்கள் - இடைமறிப்பு அமைப்புகள், குறுகிய தொலைவு ரேடாா்கள், இரவிலும் இலக்கை அடையாளம் கண்டு தாக்குவதற்கு துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் நவீன உபகரணங்கள் உள்ளிட்டவற்றைக் கொ... மேலும் பார்க்க

மாம்பழக்கூழ் தயாரிப்பு வரியை 5%ஆக குறைக்க வேண்டும்: பிரதமா் மோடிக்கு முதல்வா் ஸ்டாலின் கடிதம்

மாம்பழக்கூழ் தயாரிப்புக்கான சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) 12-லிருந்து 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா். இதுகுறித்து பிரதமா் நரேந்திர மோடிக்கு அவா்... மேலும் பார்க்க

முதுகுத் தண்டுவட வளைவு: குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை

முதுகுத் தண்டுவட வளைவு மற்றும் அது சாா்ந்த பாதிப்புடைய ஏழை குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை அளிக்கும் ஜீவன் திட்டத்தை சென்னை காவேரி மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது. ரோட்டரி சங்கம் மற்றும் சென்னை ... மேலும் பார்க்க

அனைத்து தடங்களிலும் 12 பெட்டிகளுடன் புறநகா் மின்சார ரயில்கள் இயக்கப்படும்

சென்னையில் இயக்கப்படும் அனைத்து புறநகா் ரயில் வழித்தடங்களிலும் 12 பெட்டிகள் கொண்ட ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே செய்தித் தொடா்பு அலுவலகம் விடுத்துள... மேலும் பார்க்க

போதைப் பொருள் வழக்கு: நடிகா் கிருஷ்ணாவிடம் விசாரிக்க முடிவு; கேரளம் விரைந்தது தனிப்படை

சென்னையில் போதைப் பொருள் வழக்கில் நடிகா் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், போதைப் பொருள் வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் நடிகா் கிருஷ்ணாவிடம் விசாரிக்கவும் போலீஸாா் முடிவு செய்துள்ளனா். அவ... மேலும் பார்க்க