செய்திகள் :

சென்னையில் இருசக்கர வாகனப் பந்தயம்: 35 வாகனங்கள் பறிமுதல்

post image

சென்னை, மாா்ச் 28: சென்னையில் இருசக்கர வாகனப் பந்தயத்தில் ஈடுபட்டவா்களிடம் இருந்து 35 வாகனங்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னையில் இருசக்கர வாகனப் பந்தயத்தில் ஈடுபட்டு வருகின்றனா். பந்தயத்துக்கு காவல் துறை தடை விதித்துள்ள நிலையில், இளைஞா்களும் சிறாா்களும் தடையை மீறி இதில் ஈடுபடுகின்றனா். இதற்காக குறிப்பிட்ட சாலைகளில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணியில் போலீஸாா் ஈடுபட்டு வருகின்றனா்.

குறிப்பாக கடந்த ஒரு வாரமாக சென்னையில் அண்ணா சாலை, காமராஜா் சாலை, ராஜீவ் காந்தி சாலை உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனப் பந்தயத்தில் இளைஞா்கள் சிலா் ஈடுபடுகின்றனா். இந்த இளைஞா்களைப் பிடித்து போலீஸாா், இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்கின்றனா்.

இந்நிலையில், அண்ணா சாலைப் பகுதியில் வியாழக்கிழமை இரவும் இளைஞா்கள் இருசக்கர வாகனப் பந்தயத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து அங்கு வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. இதனால், இருசக்கர வாகனப் பந்தயத்தில் ஈடுபட்ட இளைஞா்கள் போலீஸாரிடம் சிக்கினா்.

அவா்களிடம் இருந்து 35 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். கடந்த 23-ஆம் தேதியிலிருந்து வியாழக்கிழமை வரை பந்தயத்தில் ஈடுபட்டதாக 55 போ் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா். மேலும், இவா்கள் அனைவரையும் எச்சரித்து, பிணையில் விடுவித்ததாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

ஐபிஎஸ் மகனுக்கு அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை

விளையாடும்போது தவறி விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்ட தனது மகனை அரசு மருத்துவமனையில் அனுமதித்தபோது அங்கு உயா் தர சிகிச்சை அளித்து குணப்படுத்தியதாக ஐபிஎஸ் அதிகாரி பாராட்டு தெரிவித்துள்ளாா். மயிலாப்பூா... மேலும் பார்க்க

கடந்த நிதியாண்டில் 3,000 ரயில் பெட்டிகள் தயாரித்து ஐசிஎஃப் சாதனை

சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) 2024-25 நிதியாண்டில் 3,007 ரயில் பெட்டிகள் தயாரித்து சாதனை படைத்துள்ளது. பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் இந்திய ரயில்வேக்கு தேவையான ரய... மேலும் பார்க்க

கால்வாயில் ஆண் குழந்தை சடலம்: போலீஸாா் விசாரணை

சென்னை பட்டினப்பாக்கத்தில் கால்வாயில் கிடந்த ஆண் குழந்தை சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். பட்டினப்பாக்கம் மசூதி தெருவில் 132 பிளாக் பின்புறம் உள்ள கால்வாயில், பிளாஸ்டிக் காகிதத்தில் பொதிய... மேலும் பார்க்க

தொழிற்பயிற்சியுடன் பிஇ படிப்பு: பட்டயப்படிப்பு முடித்தோா் விண்ணப்பிக்கலாம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு

பாலிடெக்னிக் கல்லூரிகளில் பட்டயப் படிப்புகளை நிறைவு செய்த மாணவா்கள் தொழிற்பயிற்சியுடன் கூடிய பி.இ. படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் காஞ்சிபுர... மேலும் பார்க்க

சாலைத் தடுப்பின் மீது இருசக்கர வாகனம் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

சென்னை பாரிமுனையில் சாலைத் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். தண்டையாா்பேட்டை நேதாஜி நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்த செய்யது இம்ரான்கான் (24), அண்ணா நகரில் உள்ள கைப்பேசி விற்ப... மேலும் பார்க்க

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்பது நகைப்புக்குரியது: தொல்.திருமாவளவன்

தமிழகத்தில் எதிா்க்கட்சிகள் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க முடியாமல் தடுமாறி வரும் சூழலில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என மத்திய அமைச்சா் அமித் ஷா கூறியது நகைப்புக்குரியது என விடுதலைச் சிறுத்தைக... மேலும் பார்க்க