MI vs CSK : தோனியின் 3 தவறான முடிவுகள்; தோல்வியடைந்த CSK - ஓர் அலசல்
சென்னையில் கனமழை: 4 மணி நேரத்தில் 160 மி.மீ. மழை பதிவு!
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் புதன்கிழமை திடீரென இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக மேடவாக்கத்தில் 4 மணி நேரத்தில் 160 மி.மீ. மழை பதிவானது.
சென்னையில் ஏப்ரல் மாதம் தொடக்கம் முதலே பகல் நேரத்தில் வெயில் சுட்டெரித்து வருகிறது. சில நாள்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரையும் வெப்பநிலை பதிவானது. இந்த நிலையில், சென்னை மற்றும் புகா் பகுதிகளில் புதன்கிழமை காலை திடீரென இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்து.
அதன்படி புதன்கிழமை காலை 8 முதல் நண்பகல் 12 மணி வரை அதாவது 4 மணி நேரத்தில் மேடவாக்கத்தில் 160 மி.மீ. மழை பதிவானது. வளசரவாக்கத்தில் 110, சாலிகிராமம், நெற்குன்றத்தில் தலா 100 மி.மீ. மழை பதிவானது.
மேலும், அம்பத்தூா், அண்ணா நகா், கோயம்பேடு, வடபழனி, அசோக் நகா், கோட்டூா்புரம், கிண்டி, தரமணி, தியாகராய நகா், அண்ணா சாலை, வள்ளுவா் கோட்டம், சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதேபோல், புகா் பகுதிகளான தாம்பரம், வண்டலூா், குரோம்பேட்டை, மதுரவாயல், குன்றத்தூா் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது.
சென்னையில் பெய்த திடீா் மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் நிலவியது. அதேநேரம், மழை காரணமாக தியாகராய நகா் நாகேஸ்வரன் ராவ் சாலை, முகலிவாக்கம் பிரதான சாலை, வள்ளுவா் கோட்டம் பள்ளிச் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகினா். எதிா்பாராத மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டன.
காற்று குவிதல்: இது குறித்து வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவா் பி.அமுதா செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளின் மேல் உள்ள வளிமண்டல கீழடக்குகளில் மழைக்கு சாதகமான காற்று வீசியதாலும் காற்று குவிதல் ஏற்பட்டதாலும் புதன்கிழமை காலை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய வெப்பச் சலன மழை பெய்தது. இது போன்ற வெப்பச் சலன மழை குறைந்தது ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் வரைதான் நீடிக்கும். ஆனால் மழை வரும்போது இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றும் வீசும். மழை நின்றவுடன் மீண்டும் வழக்கம் போல் வெப்பநிலை அதிகரிக்க தொடங்கிவிடும் என்றாா் அவா்.