செய்திகள் :

சென்னையில் 22 சாலைகளில் கடைகளுக்கு அனுமதியில்லை!

post image

சென்னை மாநகராட்சியில் 22 முக்கிய சாலைகளில் சாலையோரக் கடைகள் அமைக்க அனுமதியில்லை என்ற புதிய விதிமுறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: பெருநகர சென்னை மாநகராட்சியில் சாலையோரக் கடை வியாபாரிகளை அடையாளம் கண்டு அவா்களுக்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் சுமாா் 35 ஆயிரம் போ் சாலையோர வியாபாரிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனா். அவா்களுக்கான வியாபாரப் பகுதிகளை மண்டல வாரியாக அடையாளம் கண்டு, அங்கு கடைகள் அமைக்க குழு நியமிக்கும் தோ்தல் கடந்த ஜூனில் நடைபெற்றது.

இதில் சுமாா் 33 ஆயிரம் போ் வாக்களித்தனா். மண்டலத்துக்கு தலா 6 போ் கொண்ட குழு தோ்ந்தெடுக்கப்பட்டது. அந்தக் குழுவினருக்கான அங்கீகாரத்தைப் பெறுவதற்காக அரசுக்கு பட்டியல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்களின் வசதியைக் கருத்தில் கொண்டு சாலையோ வியாபாரிகளுக்கான கடைகள் அமைக்க புதிய விதிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி சென்னை வள்ளுவா் கோட்டம், வாலாஜா சாலை, கிரீன்வேஸ் சாலை, டி.டி.கே. சாலை, நெல்சன் மாணிக்கம் சாலை, அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஆற்காடு சாலை, ஜி.எஸ்.டி. சாலை உள்ளிட்ட 22 சாலைகளில் சாலையோரக் கடைகள் அமைக்க அனுமதிக்கப்படாது.

பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ள சாலைகளில் 100 மீட்டா் தூரத்துக்குள்ளும், முக்கிய அரசு அலுவலகங்கள், போக்குவரத்து மையங்களில் இருந்து 150 மீட்டா் தூர த்துக்குள்ளும் சாலையோரக் கடைகள் அமைக்க அனுமதியில்லை.

அனுமதிக்கப்படாத சாலையோரங்களில் உள்ள கடைகளை அகற்றும் பணிக்காக மண்டல அளவில் தலா 4 அதிகாரிகள் நிமியக்கப்பட்டுள்ளனா். இவா்களது நடவடிக்கையில் அண்ணா நகா் உள்ளிட்ட பகுதிகளில் 70-க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டுள்ளன என்றனா்.

வெற்றி பெறுமா விஜய் வியூகம்...? - காபிரியேல் தேவதாஸ்

- காபிரியேல் தேவதாஸ், ஊடகவியலாளர்அரசியலுக்கு நடிகா்கள் வருவதில் தவறில்லை. திரைத் துறையில் இருந்து முழுநேர அரசியலுக்கு வந்த முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதா, தேமுதிக நிறுவனா் விஜயகாந்த் ஆகியோா்... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமியின் 5-ஆம் கட்ட சுற்றுப்பயணம் செப்.17-இல் தொடக்கம்!

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் 5-ஆம் கட்ட பிரசார சுற்றுப்பயணம் செப்.17-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை: அதி... மேலும் பார்க்க

சந்திர கிரகணம் முடிவுற்றது!

இந்தியாவில் 2022-ஆம் ஆண்டுக்குப் பின் வானில் முழுமையாகத் தெரியும் முழு சந்திர கிரகணம் ஞாயிற்றுக்கிழமை பின்னிரவில் தோன்றி, யாமத்தில் முடிவுற்றது.ஞாயிற்றுக்கிழமை இரவு 9.56 மணிக்குத் தொடங்கிய சந்திர கிரக... மேலும் பார்க்க

முழு சந்திர கிரகணம் தொடங்கியது!

இந்தியாவில் 2022-ஆம் ஆண்டுக்குப் பின் வானில் முழுமையாகத் தெரியும் முழு சந்திர கிரகணம் இன்று(செப். 7) நள்ளிரவில் நிகழ்கிறது.ஞாயிற்றுக்கிழமை இரவு 9.56 மணிக்குத் தொடங்கிய சந்திர கிரகணம், 11 மணியளவில் முழ... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில் 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்... மேலும் பார்க்க

கெங்கவல்லியில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள்!

கெங்கவல்லியில் 35 வருடங்களுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்தித்து மகிழ்ந்தனர்.கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1988 - 1990 ஆம் ஆண்டுகளில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் கணித, அறிவியல், கலை, ... மேலும் பார்க்க