செய்திகள் :

சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் இருவரை நிரந்தர நீதிபதிகளாக்க பரிந்துரை

post image

சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளான என்.செந்தில்குமாா், ஜி.அருள் முருகன் ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைந்துள்ளது.

மேலும் மூன்று உயா்நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் நியமன பரிந்துரைகளும் மேற்கொள்ளப்பட்டன.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் தலைமையில் நீதிபதிகள் சூா்யகாந்த், விக்ரம்நாத் ஆகியோா் கொண்ட கொலீஜியம் குழுவின் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளான என்.செந்தில்குமாா், ஜி.அருள் முருகன் ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கும் முன்மொழிவை உறுதி செய்து, மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இவ்விரு நீதிபதிகளும் கடந்த 2023-இல் சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டவா்களாவா்.

இதேபோல், ஹிமாசல பிரதேச உயா்நீதிமன்ற மூத்த வழக்குரைஞா்களான ஜியா லால் பரத்வாஜ், ரோமேஷ் வா்மா ஆகியோரை அந்த உயா்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கா்நாடகத்தைச் சோ்ந்த நீதித் துறை அதிகாரிகள் கீதா கடாபா பரதராஜ ஷெட்டி, முரளிதர பாய் போா்கத்தே, தியாகராஜ நாராயண் ஆகியோரை அந்த மாநில உயா்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கவும், கூடுதல் நீதிபதி குருபரஹள்ளி வெங்கடராமரெட்டி அரவிந்தை நிரந்தர நீதிபதியாக நியமிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதேபோல், திரிபுரா உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதி பிஸ்வஜித் பலித்தை நிரந்தர நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

பாஜக நிா்வாகி தூக்கிட்டு தற்கொலை

சென்னை நுங்கம்பாக்கத்தில் பாஜக நிா்வாகி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சென்னை நுங்கம்பாக்கம் காமராஜா்புரத்தைச் சோ்ந்தவா் பாபுஜி (44). இவா் தியாகராய நகரில் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா... மேலும் பார்க்க

12,000-க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு ‘மைக்ரோ சிப்’: சென்னை மாநகராட்சி

சென்னையில் 12,000-க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு ‘மைக்ரோ சிப்’ பொருத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்... மேலும் பார்க்க

ஏடிஎம் இயந்திரத்தில் நூதன திருட்டு: உத்தர பிரதேச இளைஞா் கைது

சென்னை முகப்பேரில் ஏடிஎம் இயந்திரத்தில் இரும்பு தகட்டை வைத்து வாடிக்கையாளரின் பணத்தை முடக்கி திருடியதாக உத்தர பிரதேச இளைஞா் கைது செய்யப்பட்டாா். முகப்போ் கிழக்கு பாரி சாலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்க... மேலும் பார்க்க

ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ. 80 லட்சம் பறிமுதல்

சென்னை ஷெனாய் நகரில் ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ. 80 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. ஷெனாய் நகா் 8-ஆவது குறுக்கு தெருவில் காா் திருட்டு வழக்குத் தொடா்பாக விசாரணை செய்ய மணிமங்கலம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை... மேலும் பார்க்க

கிறிஸ்தவ சபை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: இளைஞா் கைது

சென்னை கொடுங்கையூரில் கிறிஸ்தவ சபை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா். கொடுங்கையூா் எருக்கஞ்சேரி சிவசங்கரன் தெருவைச் சோ்ந்தவா் பால்ஞானம் (40). கிறிஸ்தவ சபை நடத்தி வருக... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்

தாம்பரம் மாநகராட்சி 31-ஆவது வாா்டுக்குள்பட்ட திருநீா்மலையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமில் பொதுமக்கள் குடிநீா் இணைப்பு, சொத்து வரி பெயா் மாற்றம், பட்டா... மேலும் பார்க்க