செய்திகள் :

சென்னை: சிறுவனை கடித்த நாய் - விசாரணையில் இறங்கிய போலீஸ்

post image

சென்னை போரூர் அருகே உள்ள சமயபுரம், ஸ்ரீராம் நகரில் குடும்பத்துடன் வசித்து வருபவர் வெங்கடேசன். இவரின் மகன் மோனிஷ் (6). இவன் நேற்றிரவு தெருவில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது மோனிஷ் திடீரென அலறினார். அதைக்கேட்டு வெங்கடேசனின் குடும்பத்தினர் வெளியில் வந்து பார்த்தனர். அப்போது மோனிஷை நாய் ஒன்று கடித்துக் கொண்டிருந்தது.

நாயிடமிருந்து தப்பிக்க மோனிஷ் அங்கிருந்து ஓடியபோது தவறி விழுந்ததில் அவனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. ஆனாலும் நாய் அவனை விடாமல் விரட்டி மோனிஷை கடித்தது. உடனடியாக நாயை விரட்டி விட்டு மோனிஷை வெங்கடேசனின் குடும்பத்தினர் காப்பாற்றினர். பின்னர் அவனை அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.

நாய்

பின்னர் மேல் சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் அரசு மருத்துவமனையில் மோனிஷ் அழைத்துச் செல்லப்பட்டான். அங்கு அவனுக்கு நான்கு தையல்கள் போடப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக மோனிஷின் குடும்பத்தினர் வளசரவாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் சிறுவன் மோனிஷை கடித்தது பக்கத்து வீட்டு நாய் எனத் தெரியவந்திருக்கிறது. அதனால் நாயின் உரிமையாளரிடம் விசாரணை நடந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் கலந்துக் கொண்டனர். இந்தநிலையில்தான் விருகம்பாக்கத்தில் சிறுவன் மோனுஷை நாய் கடித்திருக்கிறது. அதனால் நாயின் உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவை: தன் வீட்டருகே விளையாடியதால் கோபம்; சிறுமியை நாயை விட்டு கடிக்க வைத்த பெண்; நடந்தது என்ன?

கோவை திருச்சி சாலை, ராமநாதபுரம் அருகே அம்மன் குளம் பகுதி உள்ளது. அங்குத் தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி வாரிய அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது.அந்த குடியிருப்பில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். எ... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: பாஜக முன்னாள் மகளிரணி நிர்வாகி கொலை வழக்கு - சரண்டரான கணவரின் முதல் மனைவி மகன்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கழுகப்புலிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் பாலன் (45). திமுகவிலிருந்து பா.ஜ.க-விற்கு மாறிய இவர் மதுரை மேலுார் பகுதியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். பா.... மேலும் பார்க்க

கல்லூரி வளாகத்தில் டிரைவர் வெட்டிக் கொலை... போலீஸ் விசாரணை!

சென்னை தாம்பரம் அடுத்த வண்டலூர் அருகே உள்ள கீரப்பாக்கத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (27). இவர் வண்டலூரில் உள்ள தனியார் கல்லூரியில் டிரைவராக வேலை செய்து வந்தார். அதோடு ஆம்புலன்ஸ் டிரைவராகவும் இருந்து வந்தார... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: தலையை துண்டித்து பெண் படுகொலை; கடையை பூட்டி விட்டு வீடு திரும்பியவருக்கு நேர்ந்த துயரம்

மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் சரண்யா(35). இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது கணவர் சண்முகசுந்தரம் கடந்த 2021-ல் இறந்து விட்டார். இந்த நிலையில் பட்டுக்கோட்டை அருகே உள்ள கழுகப்புலிக்காடு கி... மேலும் பார்க்க

கோயில் விழாவில் வெடித்த மோதல்; அரிவாள் வெட்டு... குடிசைகளுக்கு தீ வைப்பு! - புதுக்கோட்டையில் பதற்றம்

புதுக்கோட்டை மாவட்டம், வடகாட்டில் நேற்று கோயில் திருவிழா நடைபெற்றது. அப்போது, அந்த திருவிழாவின் ஒருபகுதியாக தேரோட்டமும் நடத்தப்பட்டது. அப்போது, இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஒருவர்... மேலும் பார்க்க

`நான் அப்ளை செய்திடறேன்' - நீட் தேர்வுக்கு போலி ஹால் டிக்கெட் தயாரித்துக் கொடுத்த இளம்பெண் கைது!

மருத்துவப் படிப்புக்கான தகுதித்தேர்வான நீட் தேர்வு, நாடு முழுவதும் நடைபெற்றது. கேரள மாநிலம், பத்தனம்திட்டா அரசு மேனிலைப் பள்ளியில் நடந்த நீட் தேர்வு எழுத திருவனந்தபுரத்தை அடுத்த பாறசாலையைச் சேர்ந்த ஜி... மேலும் பார்க்க