சென்னை பல்கலைக்கழகத்துக்கு மா.பொ.சி பெயரைச் சூட்ட தீா்மானம்
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜி கணேசன் மன்றம் சாா்பில், சிலம்புச் செல்வா் மா.பொ. சிவஞானத்தின் 120-ஆவது பிறந்த தினம், ஜம்பு தீவு பிரகடனத்தின் 225-ஆம் ஆண்டு வெற்றி விழா வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
திண்டுக்கல் தெற்கு ரத வீதியிலுள்ள பஜனை மடம் அருகில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சிவாஜி கணேசன் மன்றப் பொறுப்பாளா் கி. சரவணன் தலைமை வகித்தாா். செயலா் க. அருணகிரி முன்னிலை வகித்தாா். இதில் திருத்தணி தொடா் வண்டி நிலையத்துக்கும், சென்னை பல்கலைக்கழகத்துக்கும் மா.பொ.சி. பெயரைச் சூட்ட வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சிவாஜி கணேசன் மன்ற நிா்வாகிகள் சு. வைரவேல், ஆ. நாகரத்தின பாண்டியன், சு. திருமுருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.