செய்திகள் :

சென்னை - பெங்களூரு போட்டி: நாளை டிக்கெட் விற்பனை!

post image

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை செவ்வாய்க்கிழமை காலை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

18-வது ஐபிஎல் தொடர் சனிக்கிழமை கோலாகலமாகத் தொடங்கிய நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை - மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டி ஞாயிற்றுக் கிழமை இரவு நடந்து முடிந்தது. இதில், 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

இதையும் படிக்க : ஐபிஎல் சரவெடி: தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங்..!

இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம் திடலில் வருகின்ற மார்ச் 28, வெள்ளிக்கிழமை இரவு சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டிக்கான டிக்கெட் ஆன்லைன் மூலம் செவ்வாய்க்கிழமை காலை 10.15 மணிக்கு விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

www.chennaisuperkings.com என்ற இணையதளத்தில் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை - மும்பை அணிகள் மோதும் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய 20 நிமிடங்களில் நிறைவடைந்தது, மேலும், 38,000 இருக்கைகளுக்கு 2 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் ஆன்லைனில் காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

எனது சதத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று கூறிய ஷ்ரேயாஸ்! - மனம் திறந்த ஷஷாங்

என்னுடைய சதத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என ஷ்ரேயாஸ் கூறியதாக பஞ்சாப் அதிரடி ஆட்டக்காரர் ஷஷாங் சிங் தெரிவித்துள்ளார். பஞ்சாப் - குஜராத் அணிகள் மோதிய ஐபிஎல் தொடரின் 5-வது லீக் போட்டி குஜராத் மாநிலம் அ... மேலும் பார்க்க

அறிமுகமான 3 அணிகளுக்கும் வெற்றியைப் பெற்றுத் தந்த ஸ்ரேயாஸ் ஐயர்!

அறிமுகமான மூன்று அணிகளுக்கும் முதல் போட்டியிலேயே வெற்றியைப் பெற்றுத் தந்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். பஞ்சாப் - குஜராத் அணிகள் மோதிய ஐபிஎல் தொடரின் 5-வது ல... மேலும் பார்க்க

இம்பாக்ட் பிளேயரின் இலக்கணம்

சென்னை எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, மும்பை இண்டியன்ஸ் நிா்ணயித்த வெற்றி இலக்கை நோக்கி சென்னை சூப்பா் கிங்ஸ் விளையாடிக் கொண்டிருந்தது. தொடக்கத்திலேயே ஒரு விக்கெட்டை இழ... மேலும் பார்க்க

ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப்

குஜராத் டைடன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 5ஆவது ஆட்டத்தில் பஞ்சாப், குஜ்ராத் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற குஜராத் டைட்ட... மேலும் பார்க்க

16 சிக்ஸர்கள், 22 பவுண்டரிகள்: பஞ்சாப் 243 ரன்கள் குவிப்பு!

பஞ்சாப் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸுக்கு 244 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ஐபிஎல் தொடரில் 5ஆவது போட்டியில் பஞ்சாப், குஜ்ராத் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை ... மேலும் பார்க்க

முதல் போட்டி தோல்வி குறித்து அதிகம் கவலைப்படவில்லை: கேகேஆர் பயிற்சியாளர்

ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து அதிகம் கவலைப்படவில்லை என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் அண்மையி... மேலும் பார்க்க