செய்திகள் :

சென்னை: மருத்துவ மாணவிக்குப் பாலியல் தொல்லை - மாணவனைத் தேடும் போலீஸ்!

post image

சென்னையில் உள்ள தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் எம்.டி.எஸ் 2-ம் ஆண்டு படித்து வருகிறார் 26 வயது மாணவி ஒருவர். இவர் கானாத்தூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், அதே கல்லூரியில் படித்து வரும் மாணவன் ஒருவன் தன்னுடன் தனிமையில் இருக்க வேண்டும் என்று பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக தெரிவித்திருந்தார். மேலும் இதற்கு சம்மதிக்கவில்லை என்பதால் தன்னை அசிங்கமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். புகாரின்பேரில் கானாத்தூர் போலீஸார், பாலியல் துன்புறுத்தல், பெண்ணை அவமதிக்கும் செயலில் ஈடுபடுதல், மிரட்டல் மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

பாலியல் தொல்லை ( சித்திரிப்புப் படம் )

தொடர்ந்து புகாரளித்த மாணவியிடம் விசாரித்தபோது இன்னொரு தகவல் வெளியானது. அது என்னவென்றால் கடந்த 2024 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் தனிமையில் இருக்க மாணவியை மாணவன் கட்டாயப்படுத்தியதாகவும் இந்தத் தகவலை மாணவி, கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என தகவல் வெளியாகியிருக்கிறது. அதுதொடர்பாக கல்லூரி நிர்வாகத்திடம் விசாரிக்க போலீஸார் முடிவு செய்திருக்கிறார்கள். புகார் கொடுத்த மாணவியைத் தவிர இன்னும் சில மாணவிகளுக்கும் அதே மாணவன் பாலியல் தொல்லை கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததையடுத்து கல்லூரி நிர்வாகம், பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையில் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் மாணவன், தலைமறைவாகி விட்டார். அவரை போலீஸார் தேடிவருகிறார்கள்.

ராமநாதபுரம்: சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை; உடந்தையாக இருந்த தாய் உட்பட மூவர் கைது; என்ன நடந்தது?

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார்ப் பள்ளி ஒன்றில் 16 வயது சிறுமி ஒருவர் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளிக்கூடம் சென்ற அவருக்குத் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.இதனால் அச்சிறுமி அழுதபடிவக... மேலும் பார்க்க

பல்லடம்: தங்கையை ஆணவக் கொலை செய்த அண்ணன்; காதலனின் புகாரால் அம்பலமான அதிர்ச்சி சம்பவம்

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே பருவாய் கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி - தங்கமணி என்ற தம்பதியின் மகள் வித்யா. 22 வயதான வித்யா, கோவை அரசு கல்லூரியில் முதுகலைப் பட்டம் பயின்று வந்துள்ளார். திருப்பூர் வ... மேலும் பார்க்க

திருப்பூர்: காதலியின் சாவில் மர்மம்; காதலனின் புகாரில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூறாய்வு

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே பருவாய் கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி மற்றும் தங்கமணி என்பவரின் மகள் வித்யா.22 வயதான வித்யா கோவை அரசுக் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பயின்று வந்துள்ளார். திருப்பூர் வ... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: 210 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த கடத்தல்காரர்கள் கைது; நடந்தது என்ன?

வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வரப்படுவதாக ராணிப்பேட்டை மாவட்ட போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.இதையடுத்து, கஞ்சா கும்பலைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைத்து தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்... மேலும் பார்க்க

`போலீஸ் பேர் வாங்க என் மகனை என்கவுன்ட்டர் செய்துள்ளனர்' - சுபாஷ் சந்திரபோஸின் தந்தை புகார்

``கொலைச் சம்பவத்தில் ஈடுபடாத என் மகனை வெளியூரில் வைத்து என்கவுன்ட்டர் செய்து இங்கு கொண்டு வந்து போட்டுள்ளனர்" என்று சுபாஷ் சந்திரபோஸின் தந்தை வீரபத்திரன் காவல்துறை மீது குற்றம்சாட்டியுள்ளார்.சுபாஷ் சந... மேலும் பார்க்க

திருமணம் மீறிய உறவு; மனைவியின் இழப்பு... கொலைசெய்த கணவனைக் காட்டிக் கொடுத்த அரிவாள் வெட்டு!

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகேயுள்ள காப்புலிங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கிலி பாண்டி. இவர், கடம்பூரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் மேனேஜராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மாரியம்மாள் ... மேலும் பார்க்க