Russia - Ukraine War: பயங்கர தாக்குதலுக்கு பிறகு அமைதி பேச்சுவார்த்தை.. முடிவு எ...
சென்னை மாநகராட்சிக்கு தனி பேரிடர் மேலாண்மை ஆணையம் உருவாக்கம்!
சென்னை மாநகராட்சிக்கு தனி பேரிடர் மேலாண்மை ஆணையம் உருவாக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
வெள்ளம், புயல் போன்ற பேரிடர் காலங்களில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து செயல்படுத்துவதற்காக இந்த ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த பேரிடர் ஆணையத்தில் சென்னை மாநகராட்சி, சென்னை காவல்துறை, மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், நீர்வளத்துறை உள்ளிட்ட துறை இடம்பெற்றுள்ளது.
தலைவராக சென்னை மாநகராட்சி ஆணையர், உறுப்பினர்களாக சென்னை மாவட்ட ஆட்சியர், சென்னை மாநகர காவல் ஆணையர், மாநகராட்சி துணை ஆணையர்கள், மாநகர சுகாதாரத்துறை அலுவலர், நீர்வளத்துறை தலைமை பொறியாளர் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.