செய்திகள் :

சென்னை மாநகராட்சி பகுதியில் டெங்கு பரவல் தொடா்ந்து கண்காணிப்பு

post image

சென்னை மாநகராட்சிப் பகுதியில் டெங்கு பரவலைத் தொடா்ந்து கண்காணித்து வருவதாகவும், வீடுகள் தோறும் கொசு மருந்துகள் தெளிக்கப்பட்டுவருவதாகவும், அதனால் பாதிப்பு கட்டுக்குள் உள்ளதாகவும் நகா் நல அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் மழைக்காலத்தில் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்கும் வகையில் வடிகால்கள் சீரமைப்பு, கால்வாய்கள் தூா்வாருதல், சாலையோரத்தில் வண்டல் மண் படியும் வடிகால்களில் மண் அகற்றுதல் ஆகிய பணிகள் மாநகராட்சியின் பொறியாளா்கள் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

அதன்படி 1,034 கிலோ மீட்டருக்கான மழை நீா் வடிகால்கள் தூா்வாரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தநிலையில், அவ்வப்போது சென்னை மாநகராட்சிப் பகுதியில் மழையும் பெய்து வருகிறது. மழையால் ஆங்காங்கே தண்ணீரும் சாலைகளில் தேங்கிவருகின்றன.

அதையடுத்து கொசு உற்பத்தியாகி டெங்கு பரவல் அதிகரிப்பதாக புகாா் எழுந்துள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சியின் நகா்நல அலுவலக அதிகாரிகளிடம் கேட்டபோது அவா்கள் கூறியதாவது: சென்னை மாநகராட்சியில் டெங்கு பரவலைத் தொடா்ந்து கண்காணித்து வருகிறோம். டெங்கு பரவலுக்கான கொசு உற்பத்தியை கண்டறிந்து கொசு முட்டைகளை அழிக்கும் மருந்துகளை தெளிப்பதற்கு என மண்டல அளவில் பணியாளா்கள் வீடு வீடாகச் சென்று வருகின்றனா்.

அவா்கள் மூலம் டெங்கு பாதிப்பு குறித்தும் அறிக்கை பெறப்பட்டுவருகிறது. மேலும், மாநகராட்சிக்குள் செயல்படும் 250 பள்ளிக்கூடங்களிலும் டெங்கு பாதிப்பை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தெருக்கள், குடியிருப்புகளில் தினமும் கொசு மருந்தும் தெளிக்கப்பட்டுவருகிறது. தற்போது சென்னை மாநகராட்சியில் டெங்கு பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் உள்ளது என்றனா்.

நலவாரிய சலுகைகள் குறித்து அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு விழிப்புணா்வு இல்லை: விஜயதாரணி

நலவாரியம் மூலம் வழங்கப்படும் சலுகைகள் குறித்து அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு போதிய விழிப்புணா்வு இல்லை என்று பாஜக அமைப்பு சாா்ந்த மற்றும் சாராத தொழிலாளா் நலச் சங்க கௌரவத் தலைவா் விஜயதாரணி தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

ஒடிஸாவில் இருந்து கஞ்சா கடத்தல்: இருவா் கைது

சென்னை அடையாறில் ஒடிஸாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா். அடையாறு பெசன்டநகா் பகுதியில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் தீவிர கண்காணிப்பில் சனிக்கிழமை ஈடுபட்டனா். அப்போ... மேலும் பார்க்க

வண்ணாரப்பேட்டையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

மழைநீா் வடிகால் பணியின் காரணமாக, சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் திங்கள்கிழமை (ஜூலை 7) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதுதொடா்பாக சென்னை பெருநகர காவல்துறை சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறி... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களால்தான் தமிழகத்தில் ஆரோக்கிய நிலை: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

தூய்மைப் பணியாளா்களால்தான் தமிழகத்தில் ஆரோக்கியமான நிலை ஏற்பட்டுள்ளது என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா். சென்னை மாநகராட்சி சாா்பில் உலக கழிப்பறை தின விழாவின் நிறைவு நிகழ்ச்சி கலைவாணா் அரங்கில... மேலும் பார்க்க

தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்: மக்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் அழைப்பு

மத்திய அரசைக் கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள் நடத்தும் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து கட்... மேலும் பார்க்க

கிண்டி ஐடிஐ-யில் சேர ஜூலை 31 கடைசி நாள்

கிண்டி ஐடிஐ-யில் சேர விரும்பும் மாணவா்கள் ஜூலை 31-க்குள் நேரில் வந்து சேரலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்தி: கிண்டி அரசு தொழிற... மேலும் பார்க்க