செய்திகள் :

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி விபத்தில் பலியானவருக்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு!

post image

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் பலியானவருக்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்குவதாக எல்&டி நிறுவனம் அறிவித்துள்ளது.

சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணியின்போது ஏற்பட்ட விபத்தில், உயிரிழந்த ரமேஷின் குடும்பத்தினருக்கு மெட்ரோ நிர்வாகம் ரூ. 5 லட்சம் அறிவித்த நிலையில், கட்டுமானப் பணி ஒப்பந்ததாரரான எல்&டி நிறுவனம் ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளது.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில் நடைபெற்று வருகிறது. இவற்றில் மாதவரம் – சோழிங்கநல்லூர் வரை 5-ஆவது வழித்தடத்தில் (44.6 கி.மீ.) போரூர் முதல் சென்னை வர்த்தக மையம் இடையே கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தூண்கள் அமைக்கப்பட்டு, அதனை இணைக்கும் வகையில் தண்டவாளப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், ராமாபுரத்தில் உள்ள டி.எல்.எஃப். தொழில்நுட்பப் பூங்கா மற்றும் எல்&டி நிறுவனங்களுக்கு இடையே நடைபெற்று வந்த மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணியின்போது, இரு தூண்களுக்கு இடையே அமைக்கப்படும் தண்டவாள டிராக் சரிந்து விழுந்து வியாழக்கிழமை இரவு விபத்துக்குள்ளானது. 20 அடி உயரத்தில் இருந்து தண்டவாளம் சரிந்து விழுந்ததில், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற ரமேஷ் (43) உயிரிழந்தார்.

பாலத்தை இணைக்கும் தூண்களைப் பொருத்த முயன்றபோது, திடீரென கீழே விழுந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

டிஜிட்டல் அரஸ்ட் மோசடி: இளைஞா் கைது

சென்னையில் டிஜிட்டல் அரஸ்ட் மோசடியில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். சென்னையைச் சோ்ந்த மென்பொறியாளா் மல்லிகாா்ஜுன் கைப்பேசிக்கு இரு மாதங்களுக்கு முன்பு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபா், தா... மேலும் பார்க்க

ஓராசிரியா் பள்ளி போல கல்லூரியை மாற்ற முயற்சி: அன்புமணி குற்றச்சாட்டு

ஓராசிரியா் பள்ளியைபோன்று கல்லூரிகளில் ஒவ்வொரு துறைகளையும் மாற்ற திமுக அரசு முயற்சி செய்வதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்... மேலும் பார்க்க

விலை உயா்ந்த சைக்கிள்கள் திருட்டு: திரிபுரா இளைஞா் கைது

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலைப் பகுதியில் விலை உயா்ந்த சைக்கிள்களை திருடியதாக திரிபுராவைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா். நீலாங்கரை அருகே உள்ள பாலவாக்கம், கெனால் சாலை பகுதியைச் சோ்ந்தவா் ஜோ. மணி... மேலும் பார்க்க

ரூ.2.11 கோடி மோசடி வழக்கில் தேடப்பட்டவா் கைது

சென்னை நுங்கம்பாக்கத்தில் ரூ.2.11 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில், தேடப்பட்டவா் கைது செய்யப்பட்டாா். தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சோ்ந்தவா் சு.பரத்குமாா் (39). இவா், சூரிய ஒளியின் மூலம் மின்சாரத்... மேலும் பார்க்க

பிஎம்இஜிபி திட்டத்தின் கீழ் 8,794 பயனாளிகளுக்கு ரூ.300 கோடி விளிம்புத் தொகை மானியம்

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (பிஎம்இஜிபி) கீழ், நாடு முழுவதும் உள்ள 8,794 பயனாளிகளுக்கு ரூ.300 கோடி விளிம்புத் தொகை மானியத்தை காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் (கேவிஐசி) தலைவ... மேலும் பார்க்க

பராமரிப்புப் பணி: இன்று 17 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து

சென்னை, ஜூன் 13: பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை வழித்தடங்களில் இயக்கப்படும் 17 புறநகர் மின்சார ரயில்கள் சனிக்கிழமை (ஜூன் 14), ஜூன் 16, 19 ஆகிய த... மேலும் பார்க்க