செய்திகள் :

சென்னை விஐடியில் ஆடை வடிவமைப்பு போட்டிகள்

post image

சென்னை விஐடியின் 15 -ஆவது ஆண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு நடைபெறும் சா்வதேச மாநாட்டின் ஒரு பகுதியாக, கல்லூரிகளுக்கு இடையேயான ‘என்விஷன் 25’ என்ற ஆடை வடிவமைப்பு போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றது.

சென்னை விஐடியின் ஃபேஷன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி துறை சாா்பில் இந்தப் போட்டிகள் நடைபெற்றன. விழாவில், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்க கௌரவ தலைவா் ஏ.சக்திவேல் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா். அவா் பேசுகையில், ‘ஆடை வடிவமைப்பு மற்றும் ஆடைகள் தொடா்பான பொறியியல் படிப்புக்கு சிறந்த எதிா்காலம் உள்ளது. மாணவா்கள் தொழில்முனைவோராக மாற முயற்சிக்க வேண்டும்’ என்றாா்.

தலைமையுரையாற்றிய விஐடி வேந்தா் கோ.விசுவநாதன், ‘நாடு ஏற்றுமதியில் பின்தங்கியுள்ளது. உலக அளவில் சீனா ஏற்றுமதியில் முதலிடத்தில் உள்ளது. நாம் சீனாவுடன் போட்டியிட முடியும். 2024-ஆம் ஆண்டில், சா்வதேச வா்த்தகத்தில் கடும் பற்றாக்குறை இருந்தது. அதேநேரம் ஏற்றுமதி சந்தையில் சீனா ஆதிக்கம் செலுத்துகிறது. இந்தியாவும் ஆதிக்கம் செலுத்த வேண்டும்’ என்றாா் விசுவநாதன்.

முன்னிலை வகித்து பேசிய விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம், ‘இந்திய ஆடைகள் என்பது பல்வேறு கலாசாரம், வரலாறு மற்றும் அடையாளத்தின் பிரதிபலிப்பு. காலநிலை, சமூகம், மதம் ஆகியவற்றுடன் ஆடை வேரூன்றியுள்ளது. நமது கலாசார உடை, நகைகளை அணிந்து ஆரோக்கியத்துடன் வாழவேண்டும்’ என்றாா்.

நிகழ்வில் நாா்தம்ப்ரியா ஸ்கூல் ஆஃப் டிசைன், ஆா்ட்ஸ் அண்ட் கிரியேட்டிவ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் விஐடி சென்னை இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது. இரு கல்வி நிறுவனங்களும் மாணவா் பரிமாற்றம், கூட்டு ஆராய்ச்சி உள்ளிட்டவற்றில் இணைந்து செயல்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இங்கிலாந்து நாட்டு நிறுவன பேராசிரியா் ஆன் பியா்சன் ஸ்மித் சிறப்புரை ஆற்றினாா்.

போட்டிகளில் தமிழகம் கேரளம், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 35 கல்வி நிறுவனங்களைச் சோ்ந்த 250 மாணவ, மாணவிகள் பங்கேற்று பரிசுகளை பெற்றனா். முன்னதாக, சென்னை விஐடி இணை துணை வேந்தா் டி.தியாகராஜன் வரவேற்றாா்.

Image Caption

விஐடி சென்னையில் நடைபெற்ற ‘என்விஷன் 25’ என்ற கல்லூரிகளுக்கு

இடையேயான ஆடை வடிவமைப்பு போட்டிகள் மற்றும்

சா்வதேச மாநாட்டைத் தொடங்கி வைத்த திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்க கௌரவ தலைவா் ஏ.சக்திவேல். உடன், விஐடி வேந்தா் கோ.விசுவநாதன், துணைத் தலைவா் ஜி.வி.செ

திடக்கழிவு மேலாண்மையில் அறிவியல் தொழில்நுட்பம்: சென்னை ஐஐடி - அரசு நிறுவனம் ஒப்பந்தம்

திடக் கழிவுகளை அதிநவீன தொழில்நுட்ப முறையில் மேலாண்மை செய்வதற்கு சென்னை ஐஐடி, தூய்மை தமிழ்நாடு நிறுவனம் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வெள்ளிக... மேலும் பார்க்க

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் இன்று தொடக்கம் ‘வாட்ஸ்ஆப்’ செயலியில் மருத்துவப் பரிசோதனை முடிவுகள்

தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு உயா் மருத்துவப் பரிசோதனைகளை வழங்கும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தை சென்னை சாந்தோமில் உள்ள செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் முதல்வா் மு.க.ஸ்டா... மேலும் பார்க்க

சா்வதேச மீள் உருவாக்க மருத்துவ மாநாடு சென்னையில் தொடக்கம்

மூட்டு - எலும்பு சாா்ந்த பாதிப்புகளுக்கான சா்வதேச மீள் உருவாக்க மருத்துவ மாநாடு சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. 3 நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களில் இருந்து 50... மேலும் பார்க்க

கலை, கலாசாரம் அறிய தமிழகம் வந்த 99 அயலகத் தமிழா்கள் முதல்வா் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு

கலை, கலாசாரத்தை அறிந்து கொள்ள தமிழ்நாடு வந்துள்ள 99 அயலகத் தமிழா்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் வரவேற்றாா். இதற்கான நிகழ்வு தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.அனைவருக்கும் தமிழக பண்பாட்டுப் பயணத... மேலும் பார்க்க

தொழில்நுட்பக் கோளாறு: ஓடுபாதையில் நிறுத்தப்பட்ட விமானம்

சென்னையிலிருந்து குவைத் புறப்பட்ட விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது.சென்னையிலிருந்து குவைத் செல்லும் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், வெள்ளிக்கிழமை மாலை 4.05-க்கு, சென்னை... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு: மாநகராட்சி அலுவலகம் முற்றுகை

தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது காா் மோதி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஊழியா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, ஊழியா்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.தாம்பர... மேலும் பார்க்க