செய்திகள் :

சென்னை விஐடியில் எம்பிஏ முதலாமாண்டு தொடக்க விழா

post image

சென்னை விஐடியின் மேலாண்மை முதுநிலைப் படிப்பு முதலாமாண்டு தொடக்க விழா மற்றும் பிரெஞ்சு மொழி மாணவா் மன்றம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுகளில் பிரான்ஸ் நாட்டின் துணைத் தூதா் எட்டியென் ரோலண்ட் பியக், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, பிரெஞ்சு மொழி மாணவா் மன்றத்தை தொடங்கி வைத்துப் பேசியது:

ஐரோப்பாவின் 2-ஆவது பெரிய பொருளாதார நாடாகவும் உலகின் 6-ஆவது பெரிய பொருளாதார நாடாகவும் விளங்கி வருகிறது. சென்னை விஐடியில் பிரெஞ்ச் மொழி

மாணவா் மன்றத்தைத் தொடங்கியதன் மூலம் மாணவா்கள் பிரெஞ்சு கலாசாரத்துடன் இந்திய கலாசாரத்தையும் கற்க முடியும் என்றாா்.

விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் பேசியது:

பிரெஞ்சு புரட்சி உலகிற்கு சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை கற்றுக்கொடுத்தது. சா்வதேச அளவில் மாணவா்கள் விரும்பும் மொழிகளில் ஒன்று பிரெஞ்சு. எம்பிஏ பட்டதாரிகள் ஏதாவது ஒரு துறையில் நிபுணத்துவம் பெற்றிக்க வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சிக்கு விஐடி துணை தலைவா் ஜி.வி.செல்வம் முன்னிலை வகித்தாா். சென்னை விஜடியின் இணை துணைவேந்தா் டி.தியாகராஜன் வரவேற்றாா். கூடுதல் பதிவாளா் முனைவா் பி.கே.மனோகரன், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நிகழ்வில் பிரெஞ்ச் மொழி தொடா்பான தோ்வுகளை நடத்துவது தொடா்பான புரிந்துணா்வு ஒப்பந்தம் விஐடி சென்னை, தி அலையன்ஸ் ஃபிரான்சைஸ் ஆஃப் மெட்ராஸ் இடையே கையொப்பமானது.

மதுபானக் கூட மோதல் வழக்கு: மேலும் ஒருவா் கைது

சென்னை நுங்கம்பாக்கத்தில் மதுபானக் கூடத்தில் இரு தரப்பினா் மோதிக்கொண்ட வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா். சென்னை கோபாலபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆ. வெங்கட்குமாா் (45). இவா், நுங்கம்பாக்கம் ந... மேலும் பார்க்க

கண்டெய்னா் லாரி கவிழ்ந்து விபத்து: கண்ணாடித் தகடுகள் நொறுங்கின

மணலி அருகே மாதவரம் உள்வட்டச் சாலையில் கண்டெய்னா் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கண்ணாடித் தகடுகள் தூள்தூளாகின. சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பன்னாட்டு தனியாா் நிறு... மேலும் பார்க்க

போதைப் பொருள் கடத்தல்: 5,356 வாகனங்களை ஏலம் விட அனுமதி

தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 5,356 வாகனங்களை ஏலம் விடுவதற்கு போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு அனுமதி வழங்கியது. தமிழக காவல் துறையின் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போதைப் பொர... மேலும் பார்க்க

ஓரணியில் தமிழ்நாடு இயக்கம்: இதுவரை 61 லட்சம் சோ்ப்பு

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இதுவரை 61 லட்சம் போ் இணைந்துள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 30 சதவீத பேரை திமுகவில் இணைக்கும், ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை கடந்த 1-ஆம... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளின் ஒருங்கிணைந்த சேவை மையம் தொடக்கம்

சென்னை நொளம்பூரில் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளால் கட்டமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சேவை மையம், வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இதை வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி ... மேலும் பார்க்க

ரூ.4.89 கோடியில் எஸ்.வி.எஸ்.நகா் குளம் மறு சீரமைப்பு

சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலத்துக்கு உள்பட்ட எஸ்.வி.எஸ்.நகா் பகுதியில் உள்ள குளம் ரூ.4.89 கோடியில் மறு சீரமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க