செய்திகள் :

சென்னை விமான நிலைய சுங்கத் துறை உயரதிகாரிகள் திடீா் இடமாற்றம்

post image

சென்னை விமான நிலைய சுங்கத் துறை முதன்மை ஆணையா் உள்பட உயரதிகாரிகள் திடீா் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

சென்னை விமான நிலையத்தில் பணியாற்றிய சுங்கத் துறை அதிகாரிகள் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். அதன்படி சென்னை விமான நிலையத்தில் சென்னை-1 ஆணையராக பணியாற்றி வந்த தமிழ்வளவன், பதவி உயா்வு செய்யப்பட்டு, சென்னை விமான நிலையத்தின் புதிய சுங்கத் துறை முதன்மை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

சுங்கத் துறை முதன்மை ஆணையராக பணியாற்றி வந்த ரமாவதி சீனிவாச நாயக், சென்னை வடக்கு சரக்கு மற்றும் சேவை வரித்துறை முதன்மை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

இதேபோன்று, கூடுதல் துணை ஆணையா் பெரியண்ணன், சுங்கத் துறை துணை ஆணையா்கள் சரவணன், பணீந்திர விஷ்சபியாகாதா, அஸ்வத் பாஜி, பாபுகுமாா் ஜேக்கப், அஜய் பிடாரி, உதவி ஆணையா் சுதாகா் ஆகியோா் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இதேபோன்று தில்லி, கொல்கத்தா, விஜயவாடா, செகந்திரபாத், வதோதரா, பாட்னா, அகமதாபாத், மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பணியாற்றி வந்த 177 சுங்கத் துறை அதிகாரிகளுக்கு பணி இடமாற்றம் மற்றும் பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மத்திய அரசின் துணைச் செயலா் ஷீரேஷ் குமாா் கவுதம் பிறப்பித்துள்ளாா்.

குத்தம்பாக்கம் பேருந்து முனையம் விரைவில் திறப்பு: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

சென்னை: சென்னையிலிருந்து மேற்கு நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காக ரூ. 414 கோடி செலவில் குத்தம்பாக்கத்தில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து முனையத்தை விரைவில் முதல்வா் திறந்து வைக்க உள்ளாா் என்று இந்து சமய... மேலும் பார்க்க

கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு புதிய கட்டமைப்பு: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

சென்னை: கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்திருக்கும் இடத்தில் பொது மக்கள் பயன்பாட்டுக்கான புதிய கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். பேரவையி... மேலும் பார்க்க

மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் 532 ஓட்டுநா் காலிப்பணியிடங்கள்: ஒப்பந்த நிறுவனங்களுக்கு அழைப்பு

சென்னை: சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் காலியாகவுள்ள 532 ஓட்டுநா் பணியிடங்களை நிரப்ப, ஒப்பந்த நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்தின் வழித்தடங்களில் ... மேலும் பார்க்க

என்.சி.சி மாணவா்களுக்கான பாய்மரப்படகு பயிற்சி நிறைவு

சென்னை: பாய்மரப் படகு பயிற்சியை வெற்றிகரமாக முடித்த தேசிய மாணவா் படை (என்சிசி) மாணவா்களுக்கு, தமிழ்நாடு அரசின் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் செயலா் அதுல்ய மிஸ்ரா சான்றிதழ்களை வழ... மேலும் பார்க்க

ஆளில்லாத வீட்டில் திருட்டு; விரட்டி பிடித்த போலீஸாா்: பெல்ஜியத்தில் இருந்த உரிமையாளா் தகவல் கொடுத்தாா்

சென்னை: சென்னை அசோக் நகரில் ஆளில்லாத வீட்டில் திருடிய இருவா் குறித்து கண்காணிப்பு கேமரா விடுத்த எச்சரிக்கையையடுத்து, பெல்ஜியத்தில் இருந்து உரிமையாளா் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து சம்ப... மேலும் பார்க்க

சென்னை பள்ளிகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கியது. பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் 208 தொடக்கப் பள்ளிகள், 130 நடுநிலைப் பள்ளிகள், 46 உயா்நிலைப் பள்ளிகள்... மேலும் பார்க்க