செய்திகள் :

சென்னை: விஷப்பூச்சி கடித்து இளம் பெண் மரணம்? காவல்துறை சொல்வது என்ன?

post image

சென்னையில் விஷப் பூச்சி கடித்து இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை, ஆவடி, கண்ணப்பாளையம், பாரதி நகரைச் சேர்ந்தவர் சர்மிளா (19).

கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29ம் தேதி) காலை, சர்மிளா தூங்கி எழுந்தபோது அவரது உடல் முழுவதும் திடீரென அரிப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து அரிப்பு ஏற்பட்ட இடங்களில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக வீட்டிலிருந்த மஞ்சளை உடல் முழுவதும் பூசிக்கொண்டு குளிக்கச் சென்றுள்ளார்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை

அப்போது வாயில் நுரை தள்ளி மயங்கி விழுந்திருக்கிறார். இதனால் பதறிய அவரின் குடும்பத்தார், அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காகத் திருவேற்காட்டிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு ஒரு நாள் முழுவதும் சிகிச்சை அளிக்கப்பட்டும் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், அங்கும் சிகிச்சை பலனின்றி சர்மிளா மரணமடைந்தார். இந்தச் சம்பவம் குறித்து ஆவடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், சர்மிளாவின் தந்தை சங்கருக்கும் ஏற்கெனவே இதேபோன்று விஷப் பூச்சி கடித்து அரிப்பு ஏற்பட்டு வீக்கம் வந்ததாகக் கூறப்படுகிறது.

அதேபோல சர்மிளாவையும் விஷப் பூச்சி ஏதேனும் கடித்து, அதனால் உயிரிழந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இருப்பினும், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அவரது மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் எனக் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

மேடையில் சுருண்டு விழுந்து இறந்த சட்டசபை ஊழியர்; அரசு ஓணம் கொண்டாட்டத்தில் நிகழ்ந்த சோகம்!

கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை இந்த ஆண்டு 11 நாட்கள் கொண்டாடப்படுகிறது. கேரள மாநிலத்தின் வசந்தவிழா என்பதால் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் என அனைத்து தரப்பினரும் அத்தப்பூ கோலம... மேலும் பார்க்க

கரூர்: மூளைச்சாவு அடைந்த சிறுமி; உறுப்பு தானம் செய்து 5 பேரின் உயிரைக் காத்த பெற்றோர்; என்ன நடந்தது?

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள சீரங்கவுண்டனூரைச் சேர்ந்தவர்கள் ரவி, செல்வநாயகி தம்பதியினர். இவர்களுக்கு, தன்யா, ஓவியா (வயது 7) என்று இரண்டு மகள்கள் இருந்தனர். இவர்கள் குடும்பத்துடன் ஓசூர் பக... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு; குற்றாலம் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்!

ராமநாதபுரம் செட்டியார் தெருவில் வசித்து வந்தவர் கோவிந்தராஜன். அரிசி வியாபாரம் செய்து வரும் இவர் தனது மனைவி யமுனா மற்றும் மகன், மகள் ஆகியோருடன் குற்றாலத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். இதற்காக நேற்று நள்... மேலும் பார்க்க

மும்பை: முதல் பிறந்தநாள், கேக் வெட்டிய சில மணி நேரத்தில் சோகம்; கட்டிடம் இடிந்து 14 பேர் உயிரிழப்பு

மும்பையில் கடந்த இரண்டு வாரமாக கனமழை பெய்தது. இதனால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டது. மும்பை அருகே உள்ள விராரில், விஜய் நகரில் இருக்கும் ரமாபாய் அபார்ட்மெண்ட் என்ற நான்கு மாடி கட்டிடம் நேற்று அதிகாலை த... மேலும் பார்க்க

சேலம்: வீட்டிற்குள் நுழைந்த நாகப்பாம்பு; பிடிக்க முற்பட்ட இளைஞருக்கு நேர்ந்த சோகம்; என்ன நடந்தது?

சேலம் மாவட்டம் நிலவாரப்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜமுருகன் (21) என்ற இளைஞர் வெல்டிங் வேலை செய்து வருகிறார். தந்தையை இழந்த இளைஞர் ராஜமுருகன் உடல்நலம் பாதிக்கப்பட்ட தாயுடன் வசித்து வந்தார்.இந்த நிலையில் ... மேலும் பார்க்க

திண்டுக்கல்: திருட்டு பைக், பட்டா கத்தி... விபத்தில் சிக்கி உயிரிழந்த இளைஞர்!

திண்டுக்கல் நாகல் நகர் நத்தம் சாலை மேம்பாலத்தில் மினி பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த வாலிபர் உடல் நசுங்கி உயிரிழந்தார். அவர் வந்த வாகனத்தில் பட்டா கத்தி இருந்ததால... மேலும் பார்க்க