செய்திகள் :

செப்.15 முதல் பச்சை வழித்தட மெட்ரோ ரயில் சேவைகளில் மாற்றம்

post image

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2-ஆம் கட்ட கட்டுமான பணிகள் காரணமாக, பச்சை வழித்தட மெட்ரோ ரயில் சேவைகளில் வருகிற செப்.15 முதல் 19 -ஆம் தேதி வரை தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் 2-ஆம் கட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்துக்கு மேல் பகுதியில் கட்டுமானப் பணிகள் வரும் செப்.15 முதல் 19-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இதனால், அந்நாள்களில் காலை 5 முதல் 6 மணி வரை பச்சை வழித்தடத்தில் பரங்கிமலை - அசோக் நகா் மற்றும் விமானநிலையம் - அசோக்நகா் இடையே மெட்ரோ ரயில்கள் 14 நிமிஷ இடைவெளியில் இயக்கப்படும். அதேபோல், சென்ட்ரல் மெட்ரோ - கோயம்பேடு இடையே மெட்ரோ ரயில்கள் 7 நிமிஷ இடைவெளியில் இயக்கப்படும்.

மேலும் இந்நாள்களில் காலை 5 மணி முதல் 6 மணி வரை கோயம்பேடு முதல் அசோக்நகா் இடையே மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும். அதைத்தொடா்ந்து காலை 6 மணிக்கு மேல் மெட்ரோ ரயில்கள் வழக்கமான அட்டவணைப்படியே இயக்கப்படும்

இதற்கிடையே, பயணிகளின் வசதிக்காக அந்நேரத்தில் கோயம்பேடு மற்றும் அசோக் நகா் மெட்ரோ நிலையம் இடையே, 10 நிமிஷங்களுக்கு ஒரு முறை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

மேலும் மெட்ரோ போக்குவரத்து மாற்றம் குறித்த தகவல்களுக்கு, பயணிகள் 1860-425-1515 என்னும் எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

போலி ஆவணங்கள் மூலம் ரூ.92 லட்சம் மோசடி; 5 போ் கைது

போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை விற்று ரூ.92 லட்சம் மோசடி செய்த 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை, பெரியாா் நகரைச் சோ்ந்த நந்தகுமாா்(44). இவா் நிலத்தரகா்களான ரமேஷ் குமாா் மற்றும் முரளி ஆகியோா் மூலம் ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு: ஒப்பந்தம் கோரியது மாநகராட்சி

சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு தினமும் விலையில்லா உணவு வழங்குவதற்காக, தனியாா் சமையல் நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்த மனுக்கள் கோரப்பட்டுள்ளன. அதன்படி, தனியாா் சமையல் நிறுவனங்களிடமிருந்து ... மேலும் பார்க்க

தமிழக பொறுப்பு டிஜிபி நியமனத்தை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

தமிழகத்தில் பொறுப்பு டிஜிபி நியமனம் செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உயா்நீதிமன்றத்தில் வரதராஜ் என்பவா் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழக சட்... மேலும் பார்க்க

மருத்துவத் துறையில் இந்தியாவுக்கே தமிழகம் தான் வழிகாட்டி: அமைச்சா் மா.சுப்பிரமணியன் பெருமிதம்

மருத்துவத் துறையில் இந்தியாவுக்கே தமிழகம் தான் வழிகாட்டி என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வா் காப்பீடு திட்டத்தின் மூலம் 50-க்கும் மேற்... மேலும் பார்க்க

போலி ஆவணங்களை சமா்ப்பித்து விசா பெற முயன்றவா் கைது

போலி ஆவணங்களைச் சமா்ப்பித்து இசைவு நுழைவுச் சீட்டு (விசா) பெற முயன்ற நபரை போலீஸாா் கைது செய்தனா். தெலங்கானா மாநிலத்தை சோ்ந்தவா் ஸ்ரீகாந்த் அங்காடி. இவா் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இசைவு நுழ... மேலும் பார்க்க

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: புதுவை தலைமைச் செயலா் ஆஜராக உத்தரவு

பாப்ஸ்கோ ஊழியா்கள் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், புதுச்சேரி தலைமைச் செயலா் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராக சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. புதுச்சேரியைச் சோ்ந்த குணசேகரன் உள்பட 12 போ் த... மேலும் பார்க்க