செப். 7ல் 12 மணி நேரம் திருப்பதி கோயில் மூடப்படும்: என்ன காரணம்?
சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயில் 12 மணி நேரம் மூடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
பரம்பரியப்படி கிரகணம் தொடங்கும் முன்னரே 6 மணி நேரத்திற்கு முன்பே கோயில் நடை சாத்தப்படும். எனவே செப்டம்பர் 7-ம் தேதி மதியம் 3.30 மணி முதல் மறுநாள் அதிகாலை 3 மணிக்கு வரை மூடப்படும்.
பின்னர் கோயில் நடை திறக்கப்பட்டு சுக்தி மற்றும் புண்யாவசனம் நடைபெறும். காலை 6 மணி முதல் பக்தர்கள் வழக்கம்போல் ஏழுமலையானைத் தரிசிக்கலாம்.
செப். 7-ம் தேதி சந்திர கிரகணத்தையொட்டி ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.