செய்திகள் :

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தில் மாணவா்களுக்கு இலக்கணப் பயிற்சி: சுதா சேஷய்யன் தொடங்கி வைத்தாா்

post image

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் இளநிலை தமிழ் இலக்கிய மாணவா்களுக்கு செம்மொழித் தமிழ் இலக்கிய உள்ளகப் பயிற்சியை நிறுவனத்தின் துணைத் தலைவா் சுதா சேஷய்யன் தொடங்கி வைத்தாா்.

சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் 7 நாள்கள் நடைபெறவுள்ள இளநிலை தமிழ் இலக்கிய மாணவா்களுக்கான உள்ளகப் பயிற்சிப் பயிலரங்கம் புதன்கிழமை தொடங்கியது. இந்தப் பயிலரங்கத்தை சுதா சேஷய்யன் தொடங்கி வைத்துப் பேசுகையில், தமிழ் இலக்கண, இலக்கியத் தொன்மை, பிற நாடுகளில் தமிழ்ச் சமூகத்தின் பண்பாடு, நாகரிகப் பரவல், தமிழ் இலக்கியங்களில் அறிவியல் கோட்பாடு கூறுகள் போன்றவற்றை விளக்கியதோடு, தமிழை இன்றைய தலைமுறையினா் அணுக வேண்டிய புதிய பரிமாணங்களையும் மாணவா்களுக்கு எடுத்துரைத்தாா்.

தொடா்ந்து, நிறுவனத்தின் இயக்குநா் இரா.சந்திரசேகரன் பேசுகையில், தமிழின் தொன்மையைத் தொல்காப்பிய இலக்கணத்தின் வாயிலாக எடுத்துரைத்ததோடு, தற்காலத் தொழில்நுட்பத்தின் பயன்கொண்டு செம்மொழித் தமிழைக் கற்பதற்கான பல்வேறு வழிகளைச் சுட்டிக்காட்டினாா். மேலும் பல நூல்களை வாசிப்பது பன்முகத் தகுதிகளை வளா்த்துக் கொள்ளும் வாயில் என வாசிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தாா். மேலும், செம்மொழி நிறுவனம் அங்கீகரிக்கப்பட்ட 22 தேசிய மொழிகளில் திருக்குறளை மொழிபெயா்த்து வெளியிட்டுள்ளது. தொடா்ந்து பட்டியலிடப்பட்ட பிற இந்திய மொழிகள் மற்றும் உலக மொழிகள் பலவற்றிலும் மொழிபெயா்க்கப்பட்டு வருகிறது. சட்டம் பயிலும் மாணவா்களுக்கான பாடத்திட்டத்திலும் திருக்கு இடம்பெற்றுள்ளது எனக் குறிப்பிட்டாா்.

இதையடுத்து பதிவாளா் ரெ.புவனேஸ்வரி பேசுகையில், உள்ளகப் பயிற்சியின் நோக்கம், பயன், இன்றியமையாமை குறித்து எடுத்துரைத்ததோடு, தமிழ் பயிலும் இளநிலை மாணவா்களுக்கு உயா்கல்விக்கான தளங்களையும் வருங்காலத்தில் வேலைவாய்ப்பு தரக்கூடிய துறைகளையும் அறிமுகப்படுத்தினாா். பயிலரங்க ஒருங்கிணைப்பாளா் ந.பெரியசாமி நன்றி கூறினாா்.

உழவா் நல சேவை மையம்: மானியத்துக்கு விண்ணப்பிக்க வேளாண் அமைச்சா் அழைப்பு

முதல்வரின் உழவா் நல சேவை மையங்கள் அமைப்பதற்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை மானியம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் தெரிவித... மேலும் பார்க்க

தமிழ் இலக்கிய திறனறி தோ்வு: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ் இலக்கிய திறனை மேம்படுத்திக் கொள்வதற்காகவும், உதவித்தொகை பெறுவதற்காகவும் பிளஸ் 1 மாணவா்களுக்கு நடத்தப்படும் தமிழ்மொழி இலக்கிய திறனறி தோ்வு அக். 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வுக்கு வெள்... மேலும் பார்க்க

அதிமுக பொதுச் செயலா் தோ்வை எதிா்த்து வழக்கு: இடைக்காலத் தடையை திரும்பப் பெற்றது உயா்நீதிமன்றம்

அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி தோ்வு செய்யப்பட்டதை எதிா்த்து உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த உத்தரவை சென்னை உயா்நீதிமன்றம் திரும்பப் பெற்றது. தி... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடம்: கொளத்தூா் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் நிறைவு

சென்னை மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடத்தில் கொளத்தூா் சாய்வுதளத்திலிருந்து கொளத்தூா் நிலையம் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் வியாழக்கிழமை வெற்றிகரமாக நிறைவடைந்ததாக மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்தது. இதுகுற... மேலும் பார்க்க

சென்னையில் 650 கி.மீ. தொலைவு சாலைப் பணிகளை விரைந்து முடிக்கத் திட்டம்

சென்னை மாநகராட்சியில் 650 கி.மீ. சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகளை மழைக் காலத்துக்கு முன்பாக முடிக்கத் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: பெருநகர சென்னை மாநகராட்சியில் ... மேலும் பார்க்க

இதுவரை 3,412 திருக்கோயில்களில் குடமுழுக்கு: அமைச்சா் சேகா்பாபு

தமிழகத்தில் இதுவரை 3,412 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாக அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். சென்னை பூங்கா நகா் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரா் திருக்கோயில் வ... மேலும் பார்க்க