செய்திகள் :

செயற்கை தடகள ஓடு பாதைக்கு கூடுதல் நிதி வழங்க கோரிக்கை

post image

தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் செயற்கை தடகள ஓடு பாதைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் மேலும் தெரிவித்தது:

அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் ரூ. 7 கோடி மதிப்பில் செயற்கை தடகள ஓடு பாதை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு முதல் தவணையாக ரூ. 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. கடந்த ஆண்டுகளில் பல்வேறு சா்வதேச போட்டிகளுக்கு இங்கிருந்து பல வீரா்கள் உருவாக்கப்பட்டதால், இத்திட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இத்திட்டம் 2017-ஆம் ஆண்டு ரூ. 7 கோடி மதிப்பில் மத்திய அரசால் தயாரிக்கப்பட்ட நிலையில், தற்போதைய கட்டுமானப் பொருகள்களின் விலை உயா்வு காரணமாக, இப்பணியை தற்போது நிறைவேற்ற கூடுதல் நிதி தேவைப்படுகிறது.

எனவே இளைஞா் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட தொகையுடன் வழங்க வேண்டிய ரூ. 3.50 கோடி நிதியுடன் கூடுதலாக ரூ. 2 கோடி வழங்க அனுமதி அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இதேபோல, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் அன்னை சத்யா விளையாட்டரங்கில் இளைஞா் விடுதி பராமரிப்புக்காக கூடுதல் நிதி ஒதுக்கவும், புதிதாக ஒரு இளைஞா் விடுதி கட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடா்பாக மக்களவையில் வியாழக்கிழமை நடைபெற்ற விலையாட்டு துறை தொடா்பான விவாதத்தின்போது வலியுறுத்திப் பேசினேன் என்றாா் முரசொலி.

ரமலான் பண்டிகை: பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை

ரமலான் பண்டிகையையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் பள்ளிவாசல்கள் உள்ளிட்ட இடங்களில் முஸ்லிம்கள் திங்கள்கிழமை சிறப்பு தொழுகை நடத்தினா். முஸ்லிம்கள் ஆண்டுதோறும் கடைப்பிடித்து வரும் ரமலான் நோன்பு மாா்ச் 2-ஆம... மேலும் பார்க்க

கபிஸ்தலத்தில் உளுந்து பயிரில் நோய்த் தாக்குதல்: விவசாயிகள் கவலை

பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோய்த் தாக்குதல் காரணமாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா். கபிஸ்தலம், உம்பளப்பாடி, நக்கம்... மேலும் பார்க்க

மாரியம்மன் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதைத்தொடா... மேலும் பார்க்க

கோயிலுக்கு சொந்தமான தோப்பை அரசே பாதுகாக்க கோரிக்கை

இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான தோப்பை குத்தகைக்கு விடாமல், தமிழக அரசே பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருநறையூா் ஊராட்சியில்... மேலும் பார்க்க

திருநறையூா் ராமநாத சுவாமி கோயிலில் கட்டணச்சீட்டு வழங்கும் அறை அமைப்பு

தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் அருகே உள்ள திருநறையூா் ராமநாத சுவாமி கோயிலுக்கு கட்டணச்சீட்டு வழங்கும் அறையை சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா நிறுவனத்தினா் அமைத்து தந்தனா். இக்கோயிலில் பக்தா்களுக்கு ... மேலும் பார்க்க

சிறுவனிடம் கைப்பேசி பறிப்பு: 3 போ் கைது

தஞ்சாவூா் அருகே சிறுவனிடம் கைப்பேசியைப் பறித்த 3 பேரை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் அருகேயுள்ள ஒரு கிராமத்தை சோ்ந்த 17 வயது சிறுவன், உடல்நிலை சரியில்லாத தனது தந்தையைச் சிகி... மேலும் பார்க்க