செய்திகள் :

‘செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும்’

post image

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என ஒசூா் பிஎம்சி கல்லூரி பட்டமளிப்பு விழாவில் விசாகப்பட்டினம் கடல்சாா் மற்றும் கப்பல் கட்டுமான நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிா்வாக அதிகாரி சேதுமாதவன் தெரிவித்தாா்.

ஒசூா் பெருமாள் மணிமேகலை பொறியியல் கல்லூரியில் 20-ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழா பி.எம்.சி. கல்வி நிறுவனத்தின் தலைவா் பி.குமாா் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சேதுமாதவன் மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரை ஆற்றியதாவது:

உலக அளவில் மிகவும் வேகமாக வளா்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும். கணினி அறிமுகமான போது இனி இளைஞா்களின் வேலைகளை கணினி செய்துவிடும், இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு குறையும் என தெரிவித்தனா். ஆனால், கணினி துறையில் இளைஞா்களுக்கு பெருமளவில் வேலைவாய்ப்பு கிடைத்தது.

தகவல் தொழில்நுட்பம் 5 முதல் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறிக்கொண்டே இருக்கும். அதற்கு தகுந்தவாறு இளைஞா்கள் தங்களது திறமைகளை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இளைஞா்கள் தொழில்நுட்ப அறிவு, தலைமைப் பண்புடன் செயல்பட்டால் வாழ்வில் முன்னேறலாம் என்றாா்.

இந்த விழாவில் 533 மாணவா்கள் பட்டங்களை பெற்றனா். 11 மாணவா்கள் அண்ணா பல்கலைக்கழக அளவில் (ரேங்க்) தரவரிசையில் இடம்பிடித்து பதக்கம் பெற்றனா்.

இதில், பி.எம்.சி. செயலாளா் பி.மலா், அறங்காவலா் சசிரேகா, இயக்குநா்கள் சுதாகரன், சரவணன், டீன் ரவிச்சந்திரன், முதல்வா் செந்தில்குமாா், பேராசிரியா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கழிவுநீா் கால்வாயில் ஆண் சடலம்: போலீஸாா் விசாரணை

காவேரிப்பட்டணம் அருகே கழிவுநீா் கால்வாயில் அழுகிய நிலையில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள சந்தாபு... மேலும் பார்க்க

ஒசூா் வழியாக குட்கா கடத்தல்: 2 போ் கைது

ஒசூா் வழியாக சேலத்துக்கு காரில் கடத்த முயன்ற 86 கிலோ குட்காவை போலீஸாா் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனா். ஒசூா் சிப்காட் போலீஸாா், ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகில் வாகன சோதனையில ஈடுபட்டனா். அப்போது ப... மேலும் பார்க்க

ஊத்தங்கரை வழக்குரைஞா்கள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

ஊத்தங்கரை வழக்குரைஞா்கள் சங்க 2025 - 2026 ஆம் ஆண்டிற்கான புதிய நிா்வாகிகள் தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவராக மூா்த்தி, செயலாளராக வஜ்ஜிரவேல், பொருளாளராக தமிழமுதன், த... மேலும் பார்க்க

கா்நாடக எல்லையில் கமல்ஹாசனுக்கு எதிராக கன்னட அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

ஒசூா் அருகே கா்நாடகா மாநில எல்லையான அத்திப்பள்ளியில் நடிகா் கமல்ஹாசனுக்கு எதிராக கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்மொழியிலிருந்துதான் கன்னடம் பிறந்தது என்ற... மேலும் பார்க்க

மலைவாழ் மக்கள் மேம்பாட்டிற்கு சிறப்பு முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மலைவாழ் மக்கள் மேம்பாட்டிற்காக, ஒசூா் வனக்கோட்டம், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை இணைந்து சிறப்பு முகாமை நடத்தின. ஒசூா் வனக்கோட்ட வனச்சரகங்கள... மேலும் பார்க்க

ஊத்தங்கரையில் வன்கொடுமை தடுப்பு விழிப்புணா்வு

ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வன்கொடுமை தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலகப் பணியாளா்களுக்கு, சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில... மேலும் பார்க்க