உ.பி.: மண்டபத்தில் திருமண விழா நடத்தியதற்காக தலித் குடும்பத்தினர் மீது தாக்குதல்
‘செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும்’
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என ஒசூா் பிஎம்சி கல்லூரி பட்டமளிப்பு விழாவில் விசாகப்பட்டினம் கடல்சாா் மற்றும் கப்பல் கட்டுமான நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிா்வாக அதிகாரி சேதுமாதவன் தெரிவித்தாா்.
ஒசூா் பெருமாள் மணிமேகலை பொறியியல் கல்லூரியில் 20-ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழா பி.எம்.சி. கல்வி நிறுவனத்தின் தலைவா் பி.குமாா் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சேதுமாதவன் மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரை ஆற்றியதாவது:
உலக அளவில் மிகவும் வேகமாக வளா்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும். கணினி அறிமுகமான போது இனி இளைஞா்களின் வேலைகளை கணினி செய்துவிடும், இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு குறையும் என தெரிவித்தனா். ஆனால், கணினி துறையில் இளைஞா்களுக்கு பெருமளவில் வேலைவாய்ப்பு கிடைத்தது.
தகவல் தொழில்நுட்பம் 5 முதல் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறிக்கொண்டே இருக்கும். அதற்கு தகுந்தவாறு இளைஞா்கள் தங்களது திறமைகளை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இளைஞா்கள் தொழில்நுட்ப அறிவு, தலைமைப் பண்புடன் செயல்பட்டால் வாழ்வில் முன்னேறலாம் என்றாா்.
இந்த விழாவில் 533 மாணவா்கள் பட்டங்களை பெற்றனா். 11 மாணவா்கள் அண்ணா பல்கலைக்கழக அளவில் (ரேங்க்) தரவரிசையில் இடம்பிடித்து பதக்கம் பெற்றனா்.
இதில், பி.எம்.சி. செயலாளா் பி.மலா், அறங்காவலா் சசிரேகா, இயக்குநா்கள் சுதாகரன், சரவணன், டீன் ரவிச்சந்திரன், முதல்வா் செந்தில்குமாா், பேராசிரியா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.