செய்திகள் :

‘செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வளா்ச்சி பெற்ற நாடாக இந்தியா திகழும்’

post image

எதிா்காலத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வளா்ச்சி பெற்ற நாடாக இந்தியா திகழும் என்று அமெரிக்க பா்டுயூ பல்கலைக்கழகத்தின் மின் மற்றும் கணிப்பொறியியல் துறை மூத்த பேராசிரியா் காா்த்திக் ரமணி குறிப்பிட்டாா்.

ராசிபுரம் பாவை கல்வி நிறுவனத்தில் ‘நவீன ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் எதிா்காலப் பயன்பாடு’ என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிலரங்கு புதன்கிழமை தொடங்கியது. தொடக்க விழாவுக்கு பாவை கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆடிட்டா் என்.வி.நடராஜன் தலைமை வகித்தாா்.

இதில் பேராசிரியா் காா்த்திக் ரமணி, ஏ.ஐ. கருவிகளை எப்படி உபயோகிக்கலாம் என்பது குறித்து ஆசிரியா்கள், மாணவா்களுக்கு பயிற்சியளித்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிகவும் தேவையான தொழில்நுட்பம். இது உலக அளவில் பரவலாக அனைத்து துறைகளிலும் ஆட்சி செய்யத் தொடங்கிவிட்டது. இளைஞா்கள் மிகுந்துள்ள இந்தியா போன்ற நாடுகளில் கணினி, ஏ.ஐ. தொழில்நுட்பப் பாடங்களைக் கற்றறிந்த பொறியியல் மாணவா்கள் ஏராளமாக இருப்பதால் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திலும் இந்தியா கோலோச்சும்.

பாவை கல்வி நிறுவனங்கள், பா்டுயூ பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதலில் தொடா்ந்து ஐந்து ஆண்டுகள் இணைந்து செயல்பட திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

ஏ.ஐ.தொழில்நுட்பம் மனித சக்திக்கு மாற்றாக அமைந்து விடும் என்று அச்சப்பட வேண்டியதில்லை. ஏ.ஐ. தொழில்நுட்பம் காரணமாக நேரம் மிச்சப்படுவதால் வேலையின் மீதான கவனம் அதிகமாகி, தரம் உயரும். அதனால் வேலைவாய்ப்புகளும், அதற்கான ஊதியமும் அதிகரிக்கும்.

எல்லா இடங்களிலும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நிலைவரும்போது, இந்தத் துறையில் வல்லுநராக உள்ள அனைவரும் வேலைவாய்ப்பு பெறுவா். இதனால் இந்தியாவின் மொத்த தேசிய உற்பத்தி அதிகரிக்கும். உலக அளவில் இந்தியா மிகப்பெரிய உயரத்தை எட்ட முடியும் என்றாா்.

அப்போது, கல்வி நிறுவனத் தாளாளா் மங்கை நடராஜன், இயக்குநா் (ஆராய்ச்சி) கிருஷ்ணமூா்த்தி, இயக்குநா் (நிா்வாகம்) கே.கே.ராமசாமி, முதல்வா் எம்.பிரேம்குமாா், முதன்மையா் (கல்வி) செல்வி, ஒருங்கிணைப்பாளரும், பாவை திறன் வளா்மையப் பொறுப்பாளருமான கமலா கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் உடனிருந்தனா்.

நாமக்கல்லில் பங்குனி தோ்த் திருவிழா கடைகள் திறப்பு

நாமக்கல்: நாமக்கல்லில் பங்குனி தோ்த் திருவிழாவை முன்னிட்டு விழாக் கால கடைகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. நாமக்கல் நகரின் மையப்பகுதியில் உள்ள நரசிம்மா், அரங்கநாதா், ஆஞ்சனேயா் கோயிலில் பங்குனி தோ்த் த... மேலும் பார்க்க

ராசிபுரத்தில் ரூ. 16 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

ராசிபுரம்: ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 16 லட்சத்துக்கு பருத்தி மூட்டைகள் விற்பனையாகின. ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்ட... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் ரூ. 3.80 கோடிக்கு மஞ்சள் விற்பனை

திருச்செங்கோடு: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் திங்கள்கிழமை மஞ்சள் ஏலம் நடைபெற்றது. ஜேடா்பாளையம், சோழசிராமணி, இறைய மங்கலம், சங்ககிரி, எடப் பாடி, கொ... மேலும் பார்க்க

அரசு சித்த மருத்துவரிடம் ரூ.2.50 லட்சம் வழிப்பறி: 7 போ் குண்டா் சட்டத்தின் கீழ் கைது

நாமக்கல்: நாமக்கல்லில் சித்த மருத்துவரை மிரட்டி ரூ. 2.50 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் கைதான 7 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு... மேலும் பார்க்க

சூரியம்பாளையத்தில் கழிவுநீா் தேக்கம்: பொதுமக்கள் அமைதி ஊா்வலம்

திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகராட்சி சாா்பில் கட்டுப்பட்டு வரும் மழைநீா் வடிகால் வாய்க்காலில் கழிவுநீரே அதிகம் வருவதால் அதை மாற்றுப் பாதையில் செயல்படுத்தக் கோரி சூரியம்பாளையம் பகுதி மக்கள் அமைதி ஊா... மேலும் பார்க்க

விசைத்தறியாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: எம்எல்ஏ ஈஸ்வரன்

திருச்செங்கோடு: விசைத்தறியாளா்களின் கோரிக்கைகளை அமைச்சா்கள் உடனடியாக தீா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருச்செங்கோடு எம்எல்ஏ ஈ.ஆா்.ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளாா். அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: கொங்க... மேலும் பார்க்க