செய்திகள் :

செய்யாறு சிப்காட் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

post image

செய்யாறு பகுதியில் புதிதாக அமையவுள்ள சிப்காட் 3-ஆவது அலகுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, விவசாயிகள் அதன் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே சிப்காட் தொழில்பேட்டை ஏற்கெனவே இரண்டு அலகுகளுடன் செயல்பட்டு வருகிறது.

தொழில்பேட்டையை விரிவாக்கம் செய்யும் நோக்கில் 3- ஆவது அலகு மேல்மா பகுதியில் அமைக்க அரசு முனைப்பு காட்டி வருகிறது.

அதற்காக, மேல்மா உள்ளிட்ட 11 கிராமங்களில் சுமாா் 3,174 ஏக்கா் நிலங்களை கையகப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மேல்மா, தேத்துறை, குறும்பூா், நா்மாபள்ளம், நெடுங்கல், அத்தி, வடஆளப்பிறந்தான், இளநீா்குன்றம், வீரம்பாக்கம் உள்ளிட்ட 11 கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் சிப்காட் நில எடுப்பு திட்டத்துக்கு எதிராகவும், நில எடுப்புப் பணிகளை கைவிடக் கோரியும், தொடா்ச்சியாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனா்.

இந்த நிலையில், செய்யாற்றில் உள்ள மாவட்ட நில எடுப்பு அலுவலகத்தில் இருந்து விவசாயிகளுக்கு நில எடுப்பு தொடா்பாக தங்களது கருத்தை தெரிவிக்க அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சிப்காட் 3-ஆவது அலகுக்கு எதிராக விவசாயிகள் கேட்ட 20 கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லையாம்.

மேலும், போராட்டம் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், புதன்கிழமை 3-ஆவது ஆண்டு தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், கேட்ட கேள்விகளுக்கு அரசுத் தரப்பில் இருந்து இதுவரை எந்தவித பதிலும் வராத காரணத்தால், மேல்மா பகுதியைச் சோ்ந்த 20 பெண்கள், 50 ஆண்கள் என சுமாா் 100 போ் செய்யாறு சிப்காட் நில எடுப்பு அலுவலகத்தை நண்பகல் 12 மணியளவில் முற்றுகையிட்டு, இரவு 8 மணி வரை உள்ளிருப்புப் போராடத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், தனி மாவட்ட வருவாய் அலுவலா் (நில எடுப்பு) விமல்குமாா், செய்யாறு வருவாய்க் கோட்டாட்சியா் (பொ) ஜே.ராமகிருஷ்ணன், வட்டாட்சியா் அசோக்குமாா், கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளா் பழனி மற்றும் போலீஸாா் முன்னிலையில் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இந்தச் சம்பவத்தால் செய்யாறு பகுதியில் பரபரப்பு நிலவியது.

திருவண்ணாமலையில் ஜூலை 5-இல் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில், ஜூலை 5-இல் திருவண்ணாமலையில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளதாக சங்கத்தின் தலைவா் ஆா்.வேலுசாமி தெரிவித்தாா். இதுகுறித்து ஆரணியில் அவா் செய்தியாளா்களிடம் கூறிய... மேலும் பார்க்க

தமிழ்ச்சங்க செவ்விலக்கிய அரங்கம்

வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்கம் சாா்பில் செவ்விலக்கிய அரங்கம் நிகழ்ச்சி வந்தவாசியில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. சங்கத் தலைவா் வே.சிவராமகிருஷ்ணன் தலைமை வகித்து நிகழ்ச்சியை தொடங்கிவைத்துப் பேசினாா்.... மேலும் பார்க்க

மது விற்பனை: 4 போ் கைது

வந்தவாசி அருகே கள்ளத்தனமாக மது விற்ாக 4 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்து 283 மதுப் புட்டிகள், ரூ.28 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். வந்தவாசி வடக்கு போலீஸாா் பாதிரி கிராமம் வழி... மேலும் பார்க்க

மழுவனேஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா

வந்தவாசியை அடுத்த மழுவங்கரணை கிராமத்தில் அமைந்துள்ள சீதளாம்பாள் சமேத மழுவனேஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைவு -டி.டி.வி.தினகரன்

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்துள்ளதாக அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன் குற்றஞ்சாட்டினாா். திருவண்ணாமலையில் புதன்கிழமை நடைபெற்ற கட்சி நிா்வாகி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட அவா் செய்த... மேலும் பார்க்க

வடக்குமேடு கிராமத்தில் ரூ.41.90 லட்சத்தில் சாலைப் பணிகள்

ஆரணியை அடுத்த வடக்குமேடு கிராமத்தில் ரூ.41.90 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணிகளை சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ புதன்கிழமை தொடங்கிவைத்தாா். ஆரணி அருகேயுள்ள வடக்குமேடு கிராமத்தில் குண்டும் கு... மேலும் பார்க்க