செய்திகள் :

`செல்ல வேண்டிய நேரம்' 80 வயதை கடந்த அமிதாப்பச்சன் இப்படி பதிவிட என்ன காரணம்? -கவலையில் ரசிகர்கள்..

post image

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் தனது மனதில் இருப்பதை சோசியல் மீடியாவில் வெளிப்படையாக பதிவிடக்கூடியவர். தற்போது அமிதாப்பச்சன் வெளியிட்டு இருக்கும் சோசியல் மீடியா பதிவு ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அமிதாப்பச்சன் தனது ட்விட்டர் பதிவில் 'செல்லவேண்டிய நேரம்' (Time to go) என்று மட்டும் குறிப்பிட்டு இருந்தார். அந்த பதிவு சோசியல் மீடியாவில் வெளியானவுடன் அவரது ரசிகர்கள் ஏன் இது போன்று பதிவிட்டு இருக்கிறார் என்று கேட்டு பதிவிட்டு வருகின்றனர். சிலர் அமிதாப்பச்சன் பதிவு குறித்து கவலை தெரிவித்துள்ளனர். ஒரு ரசிகர் எங்கே செல்லவேண்டிய நேரம் என்று கேட்டுள்ளார். மற்றொருவர் என்ன ஆச்சி சார்? என்று கேட்டுள்ளார். இன்னொரு ரசிகர் அப்படி சொல்லாதீர்கள் என்று தெரிவித்துள்ளார். ரசிகர்கள் தொடர்ந்து கவலை தெரிவித்துள்ள போதிலும் அமிதாப்பச்சன் தனது பதிவிற்கு இன்னும் விளக்கம் கொடுக்கவில்லை.

இதனால் அவர் என்ன சொல்ல வருகிறார் என்று தெரியாமல் ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். அமிதாப்பச்சன் தற்போது நடத்தி வரும் கோன்பனேகா குரோர்பதி நிகழ்ச்சி தற்போது 25வது ஆண்டை தொட்டிருக்கிறது. இதனால் 25-வது ஆண்டில் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப்போகிறாரா அல்லது நடிப்பில் இருந்து விலக்கப்போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2000ம் ஆண்டில் இருந்து கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். 80 வயதை கடந்த பிறகும் அமிதாப்பச்சன் இன்னும் படங்களில் உற்சாகமாக நடித்துக்கொண்டிருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு அபிஷேக் பச்சன் தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி அமிதாப்பச்சன் வெளியிட்டு இருந்த சோசியல் மீடியா பதிவில், அபிஷேக் பச்சன் பிறந்திருந்தபோது மருத்துவமனையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து இருந்தார்.

`ரூ.500 கோடி மதிப்புள்ள சொத்து' -60 ஆண்டுகால நண்பருக்கு உயில் எழுதி வைத்த ரத்தன் டாடா..!

தொழிலதிபர் ரத்தன் டாடா கடந்த சில மாதங்களுக்கு முன்பு காலமானார். அவர் காலமாவதற்கு முன்பாக ஒரு உயில் எழுதி வைத்துள்ளார். அந்த உயிலில் தனது தனிப்பட்ட சொத்தில் யாருக்கு என்ன கொடுக்கவேண்டும் என்பது குறித்த... மேலும் பார்க்க

``ஆண்டுக்கு 500 மாற்றுத்திறனாளி பெண்களுக்கு திருமணம்...'' -எளிமையாக திருமணம் செய்யும் ஜீத் அதானி!

தொழிலதிபர் முகேஷ் அம்பானி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மகன் ஆனந்த் அம்பானிக்கு மும்பையில் நடத்திய திருமணத்தை கண்டு ஒட்டுமொத்த உலகமே வியந்து பார்த்தது. உலக தொழிலதிபர்கள், இசைக்கலைஞர்கள், பாலிவுட்... மேலும் பார்க்க

திருமணத்தில் தகராறு; மீசை, தலை முடியை வெட்டிய குடும்பத்திற்கு ரூ.11 லட்சம் அபராதம் -நடந்தது என்ன?

திருமணத்தில் ஏற்பட்ட தகராறால், மணமகன் வீட்டாரின் மீசை, தலை முடியை மழித்ததற்காக ஒரு குடும்பத்திற்கு 11 லட்சம் அபராதம் விதித்து மகா பஞ்சாயத்து உத்தரவிட்டுள்ளது. ராஜஸ்தான், ஹரியானா போன்ற மாநிலங்களில் உள்... மேலும் பார்க்க

ஆப்கானிஸ்தான்: பெண்கள் வானொலி நிலையத்தை இடைநிறுத்திய தலிபான்கள்!

ஆஃப்கானிஸ்தானில் இயங்கி வந்த ஒரே பெண்கள் வானொலி நிலையத்தை இடைநிறுத்தம் செய்ததாக தலிபான் தகவல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2021-ல் தாலிபன்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே, பெண்களை அதிகமாக ஒட... மேலும் பார்க்க

Adani மகன் `ஜீத் அதானி' பெயரில் போலி 'வரன் கணக்கு' -ஷாக் ஆன shaadi.com CEO

சமீபத்தில் ஷார்க் டேன்க் இந்தியா நிகழ்ச்சியில் தோன்றிய அதானியின் இளைய மகன் ஜீத் அதானி, அவரது வருங்கால மனைவியான திவா ஷாவை எப்படிச் சந்தித்தார் என்பது குறித்துப் பேசியுள்ளார்.அதானி ஏர்போர்ட் இயக்குநரான ... மேலும் பார்க்க

வழுக்கை தலையுடன் திருமணம் செய்த மணப்பெண்... இணையவாசிகளை கவர்ந்த Emotional Video!

பொதுவாக மணமக்கள் திருமணத்திற்கு முன்பு தங்களை அழகாக வைத்துக் கொள்ள பல்வேறு விஷயங்களை செய்வார்கள். அடுத்தவர்கள் பிரமிக்கும் அளவிற்கு அழகாக இருக்க வேண்டுமென உடை, நகை அனைத்தையும் பார்த்து பார்த்து வாங்கு... மேலும் பார்க்க