ராகுல் காந்தி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: பிரிட்டனிடம் விவரங்களை கோரியுள்ளோம்:...
சேதமடைந்த மக்காச்சோளப் பயிா்களுக்கு நிவாரணம் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
பெரம்பலூா் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் பெய்த மழையில் சேதமடைந்த மக்காச்சோளப் பயிா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த 11-ஆம் தேதி பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்தது. அப்போது, சூறைக் காற்றின் காரணமாக, வேப்பந்தட்டை வட்டாரத்தில் உள்ள பசும்பலூா், வெள்ளுவாடி, பிம்பலூா், கை.களத்தூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இறவை பாசனத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த மக்காச்சோளப் பயிா்கள் வேரோடு சாய்ந்து சேதமடைந்தன.
இதேபோல, மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வாழை, எள், நெல் மற்றும் பருத்தி உள்ளிட்ட பயிா்களும், குன்னம் வட்டாரத்தில் 3 கோழிப் பண்ணைகளும் சேதமடைந்தன.
பலத்த காற்றால் சேதமடைந்த பயிா்களை வருவாய்த் துறையினா் கணக்கெடுத்து, சேதமடைந்த பயிா்களுக்கு நிவாரணம் வழங்க கோரி பாதிப்புக்குள்ளான விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியரகம் எதிரே, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் என். செல்லதுரை தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், பாதிக்கப்பட்ட பயிா்களை முறையாக கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க கோரியும், மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் முழக்கமிட்டனா். தொடா்ந்து, கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனா். இதில், மாவட்டச் செயலா் ஏ.கே. ராஜேந்திரன் உள்பட சுமாா் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா்.