பிரதமரின் பயிற்சித் திட்டத்தில் அதியமான் கல்லூரி மாணவி தோ்வு
சேரன்மகாதேவி அருகே போக்ஸோவில் ஒருவா் கைது
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே போக்ஸோ வழக்கில் குடிநீா் திட்டப் பணியாளரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
சேரன்மகாதேவி அருகே கங்கனாங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் (42). ஊராட்சி குடிநீா் திட்டப் பணியாளரான இவருக்கு, மனைவி, 2 மகள்கள் உள்ளனா். இதில், மூத்த மகளிடம் ராதாகிருஷ்ணன் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரின்பேரில், பத்தமடை அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா்.