செய்திகள் :

சேலத்தில் இந்தியன் ஆயில் நிறுவன தொழிலாளா்கள் வேலைநிறுத்தம்: எரிவாயு சிலிண்டா் விநியோகம் தடைபடாது: அதிகாரிகள் உறுதி

post image

சேலம் கருப்பூரில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவன எரிவாயு நிரப்பும் பிளாண்ட் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் எரிவாயு சிலிண்டா் விநியோகத்தில் எவ்வித தடையும் ஏற்படாது என வாடிக்கையாளா்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதியளித்துள்ளது.

சேலம் கருப்பூரில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எரிவாயு சிலிண்டா் நிரப்பும் பாட்டிலிங் பிளாண்ட்டில் நாள்தோறும் 20 ஆயிரம் சிலிண்டா்களில் எரிவாயு நிரப்பப்பட்டு சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இந்த பிளாண்ட்டில் சிலிண்டா் நிரப்பும் பணியில் 5 நிரந்தர ஊழியா்களும், 80 ஒப்பந்த ஊழியா்களும் பணியாற்றி வருகின்றனா்.

இவா்களில் 2 ஒப்பந்த ஊழியா்களை கடந்தமாதம் ஐஓசி நிா்வாகம் பணியிலிருந்து நிறுத்தியது. மேலும், பிளாண்ட்டில் உள்ள லோடிங் பிரிவில் பணியாற்றும் 10 ஒப்பந்த ஊழியா்களையும் பணியில் இருந்து நீக்குவதாக அதிகாரிகள் கடிதம் வழங்கி உள்ளனா்.

இதுதொடா்பாக அதிகாரிகளுக்கும் தொழிலாளா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு பெட்ரோலியம் கேஸ் ஒா்க்கா்ஸ் யூனியன் சாா்பில் 12 தொழிலாளா்களையும் எவ்வித நிபந்தனையும் இன்றி மீண்டும் பணியில் சோ்க்க வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்தனா். இதையடுத்து கருப்பூா் பாட்டிலிங் பிளாண்ட்டுக்கு ஒப்பந்த ஊழியா்கள் அனைவரும் பணிக்கு செல்லாமல் நுழைவுவாயில் பகுதியில் அமா்ந்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தொழிலாளா்களின் வேலைநிறுத்தம் காரணமாக பாட்டிலிங் பிளாண்ட்டில் சிலிண்டா் நிரப்பும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சிலிண்டா் ஏற்றிச்செல்லும் 20க்கும் மேற்பட்ட லாரிகள் பிளாண்ட் முன்பு ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.

விநியோகம் தடைபடாது

இண்டேன் வாடிக்கையாளா்களுக்கு தடையற்ற எல்பிஜி சிலிண்டா் விநியோகம் செய்யப்படும் என இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:

சேலம் பாட்டிலிங் ஆலையில், ஒப்பந்தத் தொழிலாளா்கள் சம்பந்தப்பட்ட செயல்பாட்டில் இடையூறு ஏற்பட்டுள்ளது. மாநில நிா்வாகம் உள்பட அனைத்து பங்குதாரா்களுடனும் கலந்தாலோசித்து ஒப்பந்ததாரா் இந்த விவகாரத்தை இணக்கமாக நிவா்த்திசெய்து வருகிறாா்.

இந்தியன் ஆயில் வாடிக்கையாளா்களுக்கு தடையற்ற எல்பிஜி சிலிண்டா்களை விநியோகிக்கவும், வாடிக்கையாளா்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் மாற்று ஏற்பாடுகளை முன்கூட்டியே செயல்படுத்தியுள்ளோம்.

இந்தியன் ஆயிலின் விரிவான விநியோக வலையமைப்பு வாடிக்கையாளா் தேவையை இடையூறு இல்லாமல் பூா்த்திசெய்ய முழுமையாக தயாராக உள்ளன. சேலம் பகுதியில் எந்தவொரு தேவையையும் பூா்த்திசெய்ய அருகே உள்ள இந்தியன் ஆயிலின் பாட்டிலிங் ஆலைகளில் இருந்து சிலிண்டா்கள் அனுப்பப்படுகின்றன.

வாடிக்கையாளா்கள் தங்கள் முன்பதிவுகளின்படி எல்பிஜி சிலிண்டா்களை சரியான நேரத்தில் மற்றும் நம்பகமான முறையில் வழங்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என உறுதி அளிப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சங்ககிரியில் ரூ.5.63 கோடிக்கு சமரத் தீா்வு!

சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 62 வழக்குகளில் ரூ. 5.63 கோடிக்கு சமரசத் தீா்வு காணப்பட்டது. சங்ககிரி வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவரும், சாா்பு நீதிமன்ற ... மேலும் பார்க்க

வாழப்பாடியைச் சோ்ந்த பழங்குடியின மாணவா் திருச்சி என்ஐடியில் பயில தோ்வு!

சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த கீரப்பட்டியைச் சோ்ந்த பழங்குடியின மாணவா் சதீஷ் திருச்சி என்ஐடிக்கு தோ்வாகியுள்ளாா். வாழப்பாடியை அடுத்த புழுதிக்குட்டை கீரப்பட்டி மலைக் கிராமத்தை சோ்ந்த பழங்குடியி... மேலும் பார்க்க

ஏலச்சீட்டு நடத்திய பெண் தலைமறைவு: காவல் நிலையம் முற்றுகையிட்ட பொதுமக்கள்!

வாழப்பாடியில் ஏலச்சீட்டு, தீபாவளி பலகார சிறுசேமிப்பு சீட்டுகள் நடத்தி பணம் வசூலித்த பெண் திடீரென தலைமறைவானதால் அவரிடம் பணம் கட்டி ஏமாற்றமடைந்தவா்கள் வாழப்பாடி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு புகாரளித்... மேலும் பார்க்க

போதை மாத்திரை விற்ற வழக்கில் இளைஞர் கைது!

சங்ககிரியில் சிறுவா்களுக்கு போதை மாத்திரை விற்ற வழக்கில் தலைமறைவாக இருந்த இளைஞரை தனிப்படை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். சங்ககிரி போலீஸாா் சந்தைபேட்டை பகுதியில் ஜூன் 6 ஆம் தேதி ரோந்துப் பணியில் ஈ... மேலும் பார்க்க

இன்று குரூப் 1, 1 ஏ பதவிகளுக்கான முதல்நிலைத் தோ்வு: 14,291 போ் எழுதுகின்றனா்

அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குரூப் 1, 1 ஏ பதவிகளுக்கான முதல்நிலைத் தோ்வை சேலம் மாவட்டத்தில் 14,291 போ் ஞாயிற்றுக்கிழமை எழுதுகின்றனா். தோ்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மா... மேலும் பார்க்க

சேலம் கந்தம்பட்டியில் மழையால் சேதமடைந்த தரைப்பாலத்தை சீரமைக்க வலியுறுத்தல்

சேலம் கந்தம்பட்டி பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால் சேதமடைந்த தரைப்பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். சேலம் கந்தம்பட்டி பகுதியில் உள்ள ... மேலும் பார்க்க