செய்திகள் :

சேலம் பட்டாசு விபத்தில் இறந்தோருக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி! - முதல்வர் அறிவிப்பு

post image

சேலம் கஞ்சநாயக்கன்பட்டியில் பட்டாசு வெடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே கஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் கோயில் திருவிழாவிற்கு இருசக்கர வாகனத்தில் எடுத்துச்செல்லப்பட்ட பட்டாசு வெடித்ததில் 4 பேர் பலியாகினர். இந்த விபத்தில் காயமடைந்த 5-க்கும் மேற்பட்டோா் ஓமலூா் மற்றும் சேலம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பட்டாசு வெடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் நிதியுதவியையும் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வட்டம், கஞ்சநாயக்கன்பட்டி கிராமம், பூசாரிப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் நேற்று (25.4.2025) இரவு சுமார் 3.50 மணியளவில் கஞ்சநாயக்கன்பட்டி திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இருசக்கர வாகனத்தில் பட்டாசு மூட்டையை எடுத்துச்செல்லும்போது எதிர்பாராதவிதமாக பட்டாசு தீப்பிடித்து வெடித்ததில் கஞ்சநாயக்கன்பட்டி, கொட்டமேடுவைச் சேர்ந்த செல்வராஜ் (வயது 29), குருவாலியூரைச் சேர்ந்த சிறுவர்கள் தமிழ்செல்வன் (வயது 11) த/பெ.சேட்டு மற்றும் கார்த்தி (வயது 11) த/பெ.சுப்பிரமணி ஆகிய மூன்று நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்து சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கொட்டமேடுவைச் சேர்ந்த லோகேஷ் (வயது 20) த/பெ.தங்கராஜ் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

தமிழ்நாட்டில் 7 இடங்களில் வெயில் சதம்

தமிழ்நாட்டில் சேலம் உள்பட 7 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழ... மேலும் பார்க்க

மக்களை ஏமாற்றி இனி ஆட்சியைப் பிடிக்க முடியாது: விஜய் பேச்சு

மக்களை ஏமாற்றி இனி ஆட்சியைப் பிடிக்க முடியாது என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.தவெக பூத் கமிட்டி மாநாட்டில் அவர் மேலும் பேசுகையில், தவெக தொண்டர்கள் போர் வீரர்களைப் போல செயல்பட வேண்டும். மக்களி... மேலும் பார்க்க

தவெக பூத் கமிட்டி மாநாடு நடக்கும் இடம் அருகே லேசான தீ விபத்து!

தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு நடைபெறும் இடத்திற்கு அருகே மின்கசிவு காரணமாக லேசான தீ விபத்து ஏற்பட்டது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய், கோவையில் நடைபெறும் கட்சியின் ப... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு! வெய்யில் எப்படி இருக்கும்?

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் லேசானது முதல... மேலும் பார்க்க

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், விருதுநகர் ... மேலும் பார்க்க

கடலூர்: வாகனம் மோதி சிறுவன் பலி

வேப்பூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற சிறுவன் பலியானான். கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம், அரிய நாச்சி கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி மகன் ஆகாஷ்(16). பெரிய நெசலூர்... மேலும் பார்க்க