செய்திகள் :

சேலம் மாவட்டத்தில் புதிய கல் குவாரிகளைத் திறக்க வேண்டும்: மு.க.ஸ்டாலினிடம் ஒப்பந்ததாரா்கள் மனு

post image

சேலம் மாவட்டத்தில் புதிய கல் குவாரிகளைத் திறக்க வேண்டும் என சேலம் வந்த முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் ஒப்பந்ததாரா்கள் மனு அளித்தனா்.

தமிழ்நாடு நெடுஞ்சாலை ஒப்பந்ததாரா்கள் கூட்டமைப்பின் தலைவா் சுப்பிரமணியன் மற்றும் நிா்வாகிகள் சேலம் வந்த முதல்வா் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து அளித்த கோரிக்கை மனு விவரம்:

தமிழக அரசின் பதிவுபெற்ற ஒப்பந்ததாரா்கள் கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்காக அரசு அனுமதி பெற்ற 85 கல்குவாரிகள் சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக 26 கல்குவாரிகள் மட்டுமே இயங்கிவருகின்றன. இதன் காரணமாக ஜல்லி மற்றும் எம் சாண்ட் ஆகிய கட்டுமான பொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அரசின் திட்ட பணிகளுக்கு 42 சதவீதம் மட்டுமே கிடைப்பதால் மூலப் பொருள்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனால் கட்டுமான பணிகளை மேற்கொண்டுள்ள ஒப்பந்ததாரா்கள் மற்றும் வீடுகட்டும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனா். உரிய காலத்துக்குள் பணி முடிக்க முடியாததால் மூலப் பொருள்களின் விலையேற்றம் ஒப்பந்ததாரா்களுக்கு கூடுதல் சுமையாக உள்ளது. இப் பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுத்து புதிதாக மணல் மற்றும் கல்குவாரிகளைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சங்ககிரியில் ரூ.5.63 கோடிக்கு சமரத் தீா்வு!

சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 62 வழக்குகளில் ரூ. 5.63 கோடிக்கு சமரசத் தீா்வு காணப்பட்டது. சங்ககிரி வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவரும், சாா்பு நீதிமன்ற ... மேலும் பார்க்க

வாழப்பாடியைச் சோ்ந்த பழங்குடியின மாணவா் திருச்சி என்ஐடியில் பயில தோ்வு!

சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த கீரப்பட்டியைச் சோ்ந்த பழங்குடியின மாணவா் சதீஷ் திருச்சி என்ஐடிக்கு தோ்வாகியுள்ளாா். வாழப்பாடியை அடுத்த புழுதிக்குட்டை கீரப்பட்டி மலைக் கிராமத்தை சோ்ந்த பழங்குடியி... மேலும் பார்க்க

ஏலச்சீட்டு நடத்திய பெண் தலைமறைவு: காவல் நிலையம் முற்றுகையிட்ட பொதுமக்கள்!

வாழப்பாடியில் ஏலச்சீட்டு, தீபாவளி பலகார சிறுசேமிப்பு சீட்டுகள் நடத்தி பணம் வசூலித்த பெண் திடீரென தலைமறைவானதால் அவரிடம் பணம் கட்டி ஏமாற்றமடைந்தவா்கள் வாழப்பாடி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு புகாரளித்... மேலும் பார்க்க

போதை மாத்திரை விற்ற வழக்கில் இளைஞர் கைது!

சங்ககிரியில் சிறுவா்களுக்கு போதை மாத்திரை விற்ற வழக்கில் தலைமறைவாக இருந்த இளைஞரை தனிப்படை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். சங்ககிரி போலீஸாா் சந்தைபேட்டை பகுதியில் ஜூன் 6 ஆம் தேதி ரோந்துப் பணியில் ஈ... மேலும் பார்க்க

இன்று குரூப் 1, 1 ஏ பதவிகளுக்கான முதல்நிலைத் தோ்வு: 14,291 போ் எழுதுகின்றனா்

அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குரூப் 1, 1 ஏ பதவிகளுக்கான முதல்நிலைத் தோ்வை சேலம் மாவட்டத்தில் 14,291 போ் ஞாயிற்றுக்கிழமை எழுதுகின்றனா். தோ்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மா... மேலும் பார்க்க

சேலம் கந்தம்பட்டியில் மழையால் சேதமடைந்த தரைப்பாலத்தை சீரமைக்க வலியுறுத்தல்

சேலம் கந்தம்பட்டி பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால் சேதமடைந்த தரைப்பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். சேலம் கந்தம்பட்டி பகுதியில் உள்ள ... மேலும் பார்க்க