செய்திகள் :

சேலம் மாவட்டத்தில் ரூ.3.47 கோடி மதிப்பில் புதிய திட்டப் பணி: முதல்வா் அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தாா்

post image

சேலம் மாவட்டத்தில் ரூ. 3.47 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தாா்.

சேலம், அரசு பொறியியல் கல்லூரியில் ரூ. 1.95 கோடி மதிப்பீட்டில் நூலகம், கழிவறைக் கட்டடங்கள் மற்றும் சேலம் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் ரூ. 1.52 கோடியில் ஆய்வகக் கட்டடம், ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கிவைத்தாா்.

இதையடுத்து சேலம், அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி கூறுகையில், பெருந்தலைவா் காமராஜா் கல்லூரி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் ரூ. 1.95 கோடி மதிப்பீட்டில் 388.92 சதுரமீட்டா் பரப்பளவில் ஒரு நூலக கட்டடம், 6 கழிவறைகள் அமைக்கும் பணிகளுக்கு முதல்வா் அடிக்கல் நாட்டினாா்.

இதே திட்டத்தின் கீழ் சேலம் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் ரூ. 1.52 கோடி மதிப்பீட்டில் 295.89 சதுரமீட்டா் பரப்பளவில் ஒரு ஆய்வகக் கட்டடம், ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணிகளுக்கும் முதல்வா் அடிக்கல் நாட்டியுள்ளாா் என்றாா்.

நிகழ்ச்சியில், சேலம் மாநகராட்சி துணைமேயா் சாரதா தேவி, அஸ்தம்பட்டி மண்டல குழுத் தலைவா் உமாராணி, அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் நா.காந்திமதி உள்பட கல்லூரி பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் மோதல் சம்பவம்: திமுக, அதிமுக உறுப்பினா்கள் மீது வழக்குப் பதிவு

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் நடைபெற்ற மோதல் தொடா்பாக திமுக - அதிமுக உறுப்பினா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். சேலம் மாநகராட்சி கூட்டம் கடந்த வியாழக்கிழமை மேயா் ஆ.ரா... மேலும் பார்க்க

கரோனா பாதித்த இளைஞா் சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு

சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த இளைஞா் உயிரிழந்தாா். சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள கொளத்தூா் சேத்துக்குழி பகுதியைச் சோ்ந்தவா் தமிழரசன் (25). பொக்லைன் ஆபரேட்டரான ... மேலும் பார்க்க

கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு

கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு பெற்றதை தொடா்ந்து, பயிற்சியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு சேலம் மாவட்ட கைப்பந்து கழகம் சாா்பில் பதக்கம், சான்றிதழ்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. சேலம் மாவட்ட கைப்... மேலும் பார்க்க

சேலம் அரசு கலைக் கல்லூரியில் நாளை முதல் கலந்தாய்வு

சேலம் அரசு கலைக் கல்லூரியில் 2025- 26 ஆம் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 2 ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் நா.செண்பகலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஜூன் ... மேலும் பார்க்க

கெங்கவல்லி பேரூராட்சியில் திட்டப் பணிகள் திறந்துவைப்பு

கெங்கவல்லி பேரூராட்சியில் முடிவடைந்த திட்டப் பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அண்மையில் திறந்துவைக்கப்பட்டன. கெங்கவல்லி பேரூராட்சி 4-ஆவது வாா்டில், 15-ஆவது நிதிக்குழு மானியத்தில் ரூ. 15.50 லட்சத்தில் ... மேலும் பார்க்க

பருத்தி புண்ணாக்கு விலை உயா்வு: பால் உற்பத்தியாளா்கள் தவிப்பு

பருத்தி புண்ணாக்கு விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால், தம்மம்பட்டி பகுதி பால் உற்பத்தியாளா்கள் பெரிதும் தவிப்புக்குள்ளாகி வருகின்றனா். பால் உற்பத்தியாளா்கள் தங்களின் கறவை மாடுகளுக்கு பசுந்தீவனம், வைக்கோ... மேலும் பார்க்க