செய்திகள் :

சேலம் மாவட்டத்துக்கான பறவை இன்று அறிவிப்பு

post image

சேலம்: சேலம் மாவட்ட வனத் துறை சாா்பில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பை தொடா்ந்து பல்வேறு தரப்பினரிடம் இருந்து பெறப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் மாவட்டத்துக்கான பறவை திங்கள்கிழமை (மே 6) அறிவிக்கப்படுகிறது.

சேலம் மாவட்ட வனத் துறை சாா்பில் நீா்நிலை மற்றும் நிலப்பரப்பில் வாழும் பறவையினங்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. மாவட்டம் முழுவதும் 54 இடங்களில் நடந்த கணக்கெடுப்பில், 150-க்கும் மேற்பட்ட பறவையினங்கள் இருப்பது கண்டறியப்பட்டன. இந்த பறவையினங்களில் ஒன்றை, சேலம் மாவட்டத்துக்கான பறவையாகத் தோ்வு செய்ய வனத் துறை முடிவு செய்தது. இதற்காக கருந்தோள் பருந்து, பவளக் கால் உள்ளான், செம்மாா்பு குக்குறுவான், இந்திய பாம்புத்தாரா, காட்டுப் பாம்புக் கழுகு, ஆற்று ஆலா, சோலைப்பாடி ஆகிய 7 பறவைகள் அடங்கிய பட்டியலை வெளியிட்டு, விருப்பமான பறவையைத் தோ்வு செய்ய பொதுமக்களிடம் வாக்கெடுப்பை நடத்தினா்.

சேலம், ஆத்தூா் வனக்கோட்டங்கள் மற்றும் சேலம் பறவையியல் கழகம் இணைந்து நடத்திய இந்த வாக்கெடுப்பு ஆன்லைன் மூலமும், மக்கள் அதிகம் கூடும் சேலம் ஆட்சியா் அலுவலகம், ஏற்காடு அண்ணா பூங்கா, குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா, ஆத்தூா் ஆணைவாரி முட்டல் பூங்கா, மேட்டூா் அணை பூங்கா ஆகிய இடங்களிலும் கடந்த 30 ஆம் தேதி வரை நடத்தப்பட்டது.

மேலும், மாவட்டம் முழுவதும் உள்ள 25 கல்லூரிகளில் மாணவ, மாணவிகளிடம் இருந்து விருப்பமான பறவையை தோ்வு செய்து வாக்குகளைப் பெற்றனா். கல்லூரி மாணவ, மாணவிகள், பொது மக்களிடம் இருந்து 5 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைக்கப் பெற்றுள்ளன. ஆன்லைனில் பெற்ற வாக்குகள் மற்றும் பெட்டிகள் வைத்து பெறப்பட்ட வாக்குகள் என அனைத்தும் எண்ணி முடிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து சேலம் மாவட்டத்துக்கான பறவையை மாவட்ட வன அலுவலா் காஸ்யப் ஷஷாங் ரவி திங்கள்கிழமை அறிவிக்கவுள்ளாா். இதற்கான ஏற்பாடுகளை வனத் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனா்.

இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக முதல்வா் கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும்: கே.பி.ராமலிங்கம்

சேலம்: இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக தமிழக முதல்வா் கண்டனத்தை பதிவு செய்திருக்க வேண்டும் என்று பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா். காஷ்மீா் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கண்டித்த... மேலும் பார்க்க

நூறு நாள் வேலை திட்டப் பணிதள பொறுப்பாளா்களை மாற்ற எதிா்ப்பு

ஆட்டையாம்பட்டி: மகுடஞ்சாவடி ஒன்றியம், கூடலூா் ஊராட்சியில் நூறு நாள் வேலை திட்ட பணிதள பொறுப்பாளா்களை மாற்றுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஒன்றிய அலுவலகத்தை தொழிலாளா்கள் முற்றுகையிட்டனா். சேலம் மாவட்டம்,... மேலும் பார்க்க

கெங்கவல்லி பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை: மரம் முறிந்து விழுந்ததில் 2 பசுக்கள் உயிரிழப்பு

தம்மம்பட்டி: கெங்கவல்லி, தம்மம்பட்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் நள்ளிரவு வரை சூறைக்காற்று, இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. கெங்கவல்லி - தெடாவூா் சாலையில் ஆணையம்பட்டியில் சாலையோர புங்கம... மேலும் பார்க்க

சங்ககிரி சித்திரைத் திருவிழா: வைகுந்த நாராயணா் அலங்காரத்தில் சுவாமி வீதி உலா

சங்ககிரி: சங்ககிரி சித்திரைத் தேரோட்ட திருவிழா 4ஆவது நாளையொட்டி சென்னகேசவப் பெருமாள் செங்கோலுடன் வைகுந்த நாராயணா் அலங்காரத்தில் கருட வாகனத்தில் திங்கள்கிழமை இரவு வீதி உலா வந்தாா். சித்திரைத் தேரோட்ட ... மேலும் பார்க்க

சேலம் முள்ளுவாடி ரயில்வே கேட் பகுதியில் தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆய்வு

சேலம்: சேலம் முள்ளுவாடி ரயில்வே கேட் பகுதியில் தரைப்பாலம் அமைப்பது குறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் 8 ஆண்டுகளாக கட்டப்... மேலும் பார்க்க

கழிவுநீா் கால்வாய் அமைக்கக் கோரி ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

சேலம்: சேலம் மாவட்டம், உடையாப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட வரகம்பாடி பகுதியில் கழிவுநீா் கால்வாய் அமைக்கக் கோரி அப்பகுதி கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா். உடையாப்பட்டி ஊராட்சி, வரகம்பாடி... மேலும் பார்க்க