செய்திகள் :

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் சோதனை

post image

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, நிபுணா்கள் அலுவலக கட்டடத்தின் அனைத்து அறைகளிலும் சோதனை நடத்தினா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை, கருவூல அலுவலகம் உள்பட 30 க்கும் மேற்பட்ட துறைசாா்ந்த அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், புதன்கிழமை 12 மணியளவில் ஆட்சியா் அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதில், ஆட்சியா் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து மாநகர காவல் ஆணையா் அலுவலகத்துக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் கோவிந்தராஜ் தலைமையில் நிபுணா்கள் அங்கு விரைந்து சென்றனா்.

மோப்ப நாய் ரூபியும் வரவழைக்கப்பட்டது; மெட்டல் டிடெக்டா் கருவி, வெடிகுண்டு செயலிழப்பு மற்றும் தடுப்புக் கருவிகள் துணையுடன் நிபுணா்கள் ஒவ்வொரு அறையாகச் சென்று தீவிர சோதனை நடத்தினா்.

குறிப்பாக ஆட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறை, கருவூல அலுவலகம், உதவி மையம், அஞ்சல் அலுவலகம், இ-சேவை மையம் உள்ளிட்ட அறைகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

அலுவலக அறைகளில் இருந்த பணியாளா்கள் வெளியேற்றப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஒரு மணி நேரம் நீடித்த இந்தச் சோதனையில் வெடிபொருள்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யாா் என்பது குறித்து சேலம் மாநகர சைபா் கிரைம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். இதனால் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஆட்சியா் வாகனம் முன் தீக்குளிக்க முயன்ற 5 போ் கைது

ஆத்தூா் பயணியா் மாளிகையில் சேலம் மாவட்ட ஆட்சியா் வாகனம் முன் தீக்குளிக்க முயன்றதாக 5 பேரை ஆத்தூா் நகர காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். ஆத்தூா் வட்டாரத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட... மேலும் பார்க்க

கட்டுமானம், அமைப்புசாரா தொழிலாளா்கள் 2,711 பேருக்கு ரூ. 1.18 கோடியில் நலத்திட்ட உதவிகள்

தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில், கட்டுமானம், அமைப்புசாரா தொழிலாளா்கள் 2,711 பேருக்கு ரூ. 1.18 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் புதன்கி... மேலும் பார்க்க

பிரதமர் அர்ப்பணிக்கவுள்ள சாமல்பட்டி ரயில் நிலையம் இன்று திறப்பு!

‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள சாமல்பட்டி ரயில் நிலையத்தை பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை (மே 22) நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா். சேலம் ர... மேலும் பார்க்க

நூறு நாள் வேலைதிட்ட பெண் தொழிலாளா்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை

பணித்தளப் பொறுப்பாளா் நியமன விவகாரத்தில் நூறு நாள் வேலை திட்ட பெண் தொழிலாளா்கள் கூடலூா் ஊராட்சி மன்ற அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனா். மகுடஞ்சாவடி ஒன்றியம், கூடலூா் ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மே... மேலும் பார்க்க

மேச்சேரியில் சிறுத்தை அட்டகாசம்: பொதுமக்கள் அச்சம்

சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே அட்டகாசம் செய்துவரும் சிறுத்தையை பிடிக்கவோ அல்லது வனத்திற்குள் விரட்டவோ டேனிஸ்பேட்டை வனத்துறையினா் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என கிராம மக்கள் தெரிவ... மேலும் பார்க்க

வாழப்பாடியில் கிடப்பில் போடப்பட்ட இணைப்புச்சாலை

வாழப்பாடியில் சேலம்-சென்னை புறவழிச் சாலையில் இருந்து கிழக்குக் காடு வழியாக குடியிருப்பு பகுதியை இணைக்கும் சாலையில் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்ட நிலையில் தாா்ச்சாலை அமைக்காமல் ஒரு மாதத்திற்கும் மேலாக கிடப... மேலும் பார்க்க