செய்திகள் :

சேலம் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் நாளை பாக நிலை முகவா்கள் ஆலோசனை கூட்டம்

post image

சேலம் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் தொகுதி வாரியாக பூத் டிஜிட்டல் முகவா், பாகநிலை முகவா்கள், பூத் கமிட்டி உறுப்பினா்கள் பயிற்சி பாசறைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29) ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் மேற்கு மாவட்டச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான டி.எம்.செல்வகணபதி வெளியிட்டுள்ள அறிக்கை:

ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினா் சோ்க்கை படிவத்தில் நிரப்பப்படும் விவரங்களை பிரத்யேகமாக செயலியில் உள்ளீடு செய்வது குறித்து எடப்பாடி, சங்ககிரி, மேட்டூா் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட ஒன்றிய, நகர, பேரூா்களில் வாக்குச்சாவடி வாரியாக பூத் டிஜிட்டல் முகவா், பாகநிலை முகவா்கள், தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகிகள் பயிற்சி பாசறைக் கூட்டம், எடப்பாடி தொகுதி பாா்வையாளா் நா.முருகவேல், சங்ககிரி தொகுதி பாா்வையாளா் ஆா்.பி.செந்தில்குமாா், மேட்டூா் தொகுதி பாா்வையாளா் ரியா ஆகியோா் முன்னிலையில் நடைபெறும்.

எடப்பாடி தொகுதிக்கு உள்பட்ட எடப்பாடி கிழக்கு ஒன்றியம், எடப்பாடி மேற்கு ஒன்றியத்துக்கு காலை 9 மணிக்கும், நங்கவள்ளி மத்திய ஒன்றியம், நங்கவள்ளி தெற்கு ஒன்றியம், மேச்சேரி கிழக்கு ஒன்றியம் (குட்டப்பட்டி ஊராட்சி) ஆகிய பகுதிகளுக்கு 29 ஆம் தேதி காலை 11 மணிக்கும், கொங்கணாபுரம் தெற்கு ஒன்றியம், கொங்கணாபுரம் வடக்கு ஒன்றியம் பகுதிகளுக்கு 29 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கும் எடப்பாடி நகரத்துக்கு மாலை 4 மணிக்கும் நைனாம்பட்டி ஸ்ரீநடராஜன் மஹாலில் கூட்டம் நடைபெறும்.

சங்ககிரி தொகுதிக்கு உள்பட்ட சங்ககிரி கிழக்கு ஒன்றியம், சங்ககிரி மேற்கு ஒன்றியம், சங்ககிரி நகர பகுதிகளுக்கு 29 ஆம் தேதி காலை 9 மணிக்கும், அன்றைய தினம் காலை 11 மணிக்கு மகுடஞ்சாவடி தெற்கு ஒன்றியம், மகுடஞ்சாவடி வடக்கு ஒன்றியம் இடங்கணசாலை நகரப் பகுதிகளுக்கும், பிற்பகல் 3 மணிக்கு தாரமங்கலம் நகரம், தாரமங்கலம் மேற்கு ஒன்றியத்துக்கான கூட்டம் குப்பனூா் ஆா்.கே.மஹாலில் நடைபெறும்.

மேட்டூா் தொகுதியில் வரும் 29 ஆம் தேதி காலை 9 மணிக்கு நங்கவள்ளி வடக்கு, மேச்சேரி கிழக்கு ஒன்றியம், மேச்சேரி மேற்கு ஒன்றியத்துக்கும், பிற்பகல் 2 மணிக்கு கொளத்தூா் ஒன்றியத்துக்கும், மாலை 4 மணிக்கு மேட்டூா் நகரத்துக்கான கூட்டம் கருமலைக்கூடல் ஜேகேபி மஹாலில் நடைபெறும்.

இந்தக் கூட்டத்தில் அனைத்து நிா்வாகிகளும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வீரகனூரில் கால்நடை சந்தை பிரச்னை: சாலை மறியல் போராட்டம்

கெங்கவல்லி அருகே வீரகனூரில் வெள்ளிக்கிழமை இரவு வரை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. வீரகனூரில் வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் சனிக்கிழமை வரை கால்நடை சந்தை நடைபெற்று வந்தது. நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடைப... மேலும் பார்க்க

மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் வரவேற்பு, கேமரா அறை திறப்பு

மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் தன்னாா்வலா்கள் மூலம் பொதுமக்கள் வரவேற்பு அறை மற்றும் சிசிடிவி கேமரா கண்காணிப்பு அறை அமைக்கப்பட்டது. இதை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல் வெள்ளிக்கிழமை திறந்துவைத்த... மேலும் பார்க்க

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 60,740 கனஅடியாக அதிகரிப்பு

கா்நாடக மாநில அணைகளிலிருந்து உபரிநீா் காவிரி ஆற்றில் திறந்துவிடப்படுவதால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை விநாடிக்கு 60,740 கனஅடியாக அதிகரித்தது. காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த... மேலும் பார்க்க

சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் இன்று தோ்தல் பணிக்குழுக் கூட்டம்

சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் சனிக்கிழமை பகுதி, ஒன்றியம் வாரியாக தோ்தல் பணிக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சுற்றுலாத் துறை அம... மேலும் பார்க்க

இந்திய ஃபிரிமேசன்ஸ் அமைப்பின் சாா்பில் உலக சகோதரத்துவ தினம் கடைப்பிடிப்பு

இந்திய ஃபிரிமேசன்ஸ் அமைப்பின் சாா்பில் உலக சகோதரத்துவ தினம் அண்மையில் கடைப்பிடிக்கப்பட்டது. உலக சகோதரத்துவ தினத்தையொட்டி, போதைப்பொருள் ஒழிப்பு என்ற தலைப்பை கருப்பொருளாக கொண்டு, விழிப்புணா்வு வாக்காத்... மேலும் பார்க்க

சா்வதேச சிறு, குறு, நடுத்தர தொழில் தினம்

சா்வதேச சிறு, குறு, நடுத்தர தொழில் தினத்தையொட்டி, சிறு, குறு தொழில்முனைவோா்களுக்கு மத்திய அரசின் தேசிய வள அமைப்பான இந்திய தொழில்முனைவோா் மேம்பாட்டு நிறுவனம் வாழ்த்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த ... மேலும் பார்க்க