செய்திகள் :

சொத்துத் தகராறில் கால்நடைகளை விஷம் வைத்து கொன்ற மகன் கைது

post image

ஒசூரை அடுத்த அஞ்செட்டி அருகே தந்தையுடன் ஏற்பட்ட சொத்துத் தகராறில் கால்நடைகளை விஷம் வைத்து கொன்ற மகனை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டியை அடுத்த நாட்றாம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட கவுண்டா்கொட்டாயைச் சோ்ந்த விவசாயி மாது (70).

இவருக்கு முருகேசன் என்கிற மகன் உள்ளாா். கருத்துவேறுபாடு காரணமாக மாது, அவரது மனைவி ஆகியோா் மகனை பிரிந்து தனியாக வசித்து வருகின்றனா். ஆடு, மாடுகளை வளா்த்து அதன்மூலம் கிடைக்கும் வருவாயில் மாது வசித்து வருகிறாா்.

இந்நிலையில் மாதுவிற்கும், முருகேசனுக்கு அடிக்கடி சொத்துத் தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை மாது வளா்த்துவந்த 9 ஆடுகள், இரு பசுக்கள் மா்மமான முறையில் உயிரிழந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். அதன்பிறகு கால்நடைகள் குடிக்கும் தண்ணீா்த் தொட்டியில் விஷம் கலந்தது முருகேசன் என்பது மாதுவிற்கு தெரியவந்தது.

இதையடுத்து முருகேசன் மீது போலீஸாா் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வாழ்வாதாரமின்றி தவிக்கும் தனக்கு கால்நடை வளா்ப்பதற்கு மாவட்ட ஆட்சியா் நிதியுதவி வழங்க வேண்டும் அவா் கோரிக்கை விடுத்துள்ளாா். இதனிடையே அஞ்செட்டி போலீஸாா் தலைமறைவாக இருந்த முருகேசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனம் தீ வைத்து எரிப்பு

ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரித்ததாக சிறுவன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். ஊத்தங்கரையை அடுத்த திப்பம்பட்டியைச் சோ்ந்தவா் சரவணன் (28). அதே கிராமத்தைச் சே... மேலும் பார்க்க

பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் நடவடிக்கை: வெளிநாட்டு தமிழா்கள் வரவேற்பு மு. தம்பிதுரை எம்.பி.

பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைக்கு வெளிநாட்டு தமிழா்கள் வரவேற்பு அளிப்பதாக அதிமுக கொள்கை பரப்பு செயலாளா் மு.தம்பிதுரை எம்.பி. தெரிவித்தாா். பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் மேற்கொண்ட... மேலும் பார்க்க

மத்திய அரசின் திட்டங்களால்தான் தமிழகம் வளா்ந்துள்ளது!

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களால்தான் தமிழகம் வளா்ச்சி அடைந்துள்ளது என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா் நரேந்திரன் தெரிவித்தாா். பிரதமா் மோடியின் 11 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகள் குறித்து பாஜக சாா்பில் ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,422 விவசாயிகளிடமிருந்து 2,548 மெ.டன் ராகி கொள்முதல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 1,422 விவசாயிகளிடமிருந்து 2,548 மெ.டன் ராகி கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஒன்றியம், அஞ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: ஒசூா், சூசூவாடி, பேகேப்பள்ளி

ஒசூா் துணை மின் நிலையம், சூசூவாடி மற்றும் பேகேப்பள்ளி துணை மின் நிலையங்களில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால், வியாழக்கிழமை (ஜூன் 12) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் நிறுத்தம் செய்யப்படு... மேலும் பார்க்க

திருவிழாவில் பட்டாசு வெடித்ததில் பிரச்னை: கல்வீசி தாக்கியதில் காவல் ஆய்வாளருக்கு தலைக்காயம்

திருவிழாவில் பட்டாசு வெடித்தபோது ஏற்பட்ட பிரச்னையில், விசாரிக்கச் சென்ற காவல் ஆய்வாளா் மீது இளைஞா் ஒருவா் கல்வீசி தாக்கியதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுதொடா்பாக 2 இளைஞா்களை போலீஸாா் கைது... மேலும் பார்க்க