செய்திகள் :

சொத்து வரியை செலுத்த இன்றே கடைசி!

post image

சென்னை மாநகராட்சியில் நடப்பு அரையாண்டிற்கான சொத்து வரியை செலுத்த இன்று(செப். 30) கடைசி நாளாகும்.

சென்னை மாநகராட்சிப் பகுதியில் வசிப்போர் நடப்பு ஆண்டுக்கான இறுதி அரையாண்டு சொத்து வரியை இன்றைய நாளுக்குல் செலுத்தவேண்டும், இல்லையெனில் தனி வட்டி விதிக்கப்படும். இதனைத் தவிர்க்க இன்றே சொத்து வரியை செலுத்த வேண்டும்.

கடந்த ஏப்.1 ஆம் தேதி முதல் செப்.29 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் ரூ. 930 கோடி சொத்துவரி வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும், 75% பேர் இணையம் மூலம் செலுத்தி இருப்பதாகவும் சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய நடப்பு அரையாண்டுக்கு உரிய (2025-26) சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் இன்றைய நாளுக்குள் செலுத்த வேண்டும்.

அதன்படி தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்பு சட்டத்தின்படி தாமதத்துக்கு விதிக்கப்படும் தனி வட்டி விதிப்பைத் தவிர்க்கலாம்.

சொத்து வரி செலுத்துவது எப்படி?

சொத்து வரிகளை பெருநகர சென்னை மாநகராட்சியின் வரி வசூலிப்பவர்கள், அரசு இ-சேவை மையங்கள், இணையதளம் மூலமாக செலுத்தலாம்.

அத்துடன் பேடிஎம், நம்ம சென்னை செயலி, கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகள், யூபிஐ சேவை, காசோலைகள், கியூ ஆர் கோடு, வாட்ஸ் அப் செயலி (எண் 9445061913) என செலுத்தும் வசதியும் உள்ளது.

அத்துடன் குடியிருப்புகள் அருகேயுள்ள மாநகராட்சியால் குறிப்பிடப்பட்ட அரசு அலுவலகங்களிலும் சொத்துவரி செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

Today (Sept. 30) is the last day to pay property tax for the current half-year in the Chennai Corporation.

'பரிவாஹன்' பெயரில் வரும் வாட்ஸ்ஆப் லிங்க்குகளைத் திறக்க வேண்டாம்!

பரிவாஹன் என்ற பெயரில் வாட்ஸ்ஆப்பில் வரும் போலி லிங்க்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என்று தமிழக போக்குவரத்துத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இணைய மோசடிகள், அதிலும் குறிப்பாக இப்போது மொபைல்போனை குறிவைத்த... மேலும் பார்க்க

சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பியதாக மூவா் கைது: 22 போ் மீது வழக்கு

சென்னை: கரூா் சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பியதாக, 3 போ் கைது செய்யப்பட்டனா். மேலும் 22 போ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய், கரூரில... மேலும் பார்க்க

காலமானார் ஞானத்தாய்

அம்பாசமுத்திரம் தினமணி செய்தியாளர் அழகியநம்பியின் தாயார் காலமானார்.ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி முன்னாள் பேராசிரியர் மு.செ. குமாரசாமி (அறிவரசன்) துணைவியார் ஞானத்தாய் (84) வயது மூப்பு காரணமா... மேலும் பார்க்க

கரூர் பலி: புஸ்ஸி ஆனந்த் தலைமறைவு?

கரூர் நெரிசல் பலிகளைத் தொடர்ந்து தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமறைவானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய் நேற்று (செப். 27) இரவு கரூரில் பரப்புரையில் ஈடுபட்டபோது ஏற்பட்... மேலும் பார்க்க

இனி விஜய்யின் பேச்சு தொடருமா?

கரூர் சம்பவத்தால் விஜய்யின் அடுத்தடுத்த பரப்புரைகள் கேள்விக்குள்ளாகியுள்ளன. நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய் நேற்று (செப். 27) இரவு கரூரில் பரப்புரையில் ஈடுபட்டபோது ஏற்பட்ட மிக மோசமான நெரிசலில் 39 பேர... மேலும் பார்க்க

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனையை நோக்கி நகரும் அபிஷேக் சர்மா!

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனையை நோக்கி நகர்ந்து வருகிறார்.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 4 சுற்றுக்கான போட... மேலும் பார்க்க