செய்திகள் :

“சொந்த நாட்டில் பிச்சையெடுத்து பிழைப்போம்!” -ஆப்கன் அகதிகள் வெளியேற இன்றே கடைசி நாள்

post image

ஈரானிலிருக்கும் ஆப்கானிஸ்தான் அகதிகள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அதற்கான காலக்கெடுவும் இன்றுடன்(ஜூலை 6) முடிவடைவதால் இருநாட்டு எல்லையில் ஆப்கன் மக்கள் பெருந்திரளாக குழுமியுள்ளனர்.

ஈரானிலிருந்து வரும் மக்களை ஆப்கானிஸ்தானுக்குள் அனுமதிக்க தேவையான நடைமுறைகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதனால் இருநாட்டுக்கிடையிலான ‘இஸ்லாம் ஃகாலா’ எல்லையில் கடும் கூட்டம் காணப்படுகிறது.

இதனால் ஆப்கன் எல்லையில் ‘அவசரநிலை’ ஏற்பட்டுள்ளதாக ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதம் ஈரான் அரசு பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து உரிய ஆவணங்களின்றி சட்டவிரோதமாக குடியேறிய ஆப்கன் அகதிகள் ஈரானிலிருந்து வெளியேறி வருகின்றனர். சுமார் 60 லட்சம் ஆப்கன் மக்கள் ஈரானில் தஞ்சமடைந்திருக்கும் நிலையில், புதிய உத்தரவால் 40 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவர்.

ஜூன் மாதம் 2.50 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆப்கன் மக்கள் ஈரானிலிருந்து திரும்பியிருப்பதாக ஐ.நா. தெரிவிக்கிறது.

ஆப்கானிஸ்தானில் மக்கள் குடியேற்றம் அதிகரிப்பதால் அங்கு அவசரநிலை நிலவுவதாக ஐ.நா. தெரிவிக்கிறது. இந்த ஓராண்டில் பாகிஸ்தான் மற்றும் ஈரானில் இருந்து 14 லட்சம் ஆப்கன் மக்கள் தாயகம் திரும்பியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுள் 25 சதவீதத்தினர் குழந்தைகள்.

ஈரானில் இருக்கும் ஆப்கன் அகதிகள் வெளியேற கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அதிகாரிகளின் கடும் அழுத்தத்தாலும் கைது நடவடிக்கைகளுக்கு பயந்தும் வேறு வழியின்றி தாயகம் திரும்புவதாக ஆப்கன் அகதிகள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து, ஈரானிலிருந்து எல்லை சென்றடைந்த ஒரு அகதி பேசியதாவது: “ஈரானில் கடும் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதைவிட எமது சொந்த நாட்டில் பிச்சையெடுத்து பிழைக்க தயாராக இருக்கிறோம்” என்கிறார்.

வறுமை, வேலையில்லா திண்டாட்டம், பருவநிலை மாற்றம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானுக்கு, வெளிநாடுகளின் அகதிகள் வெளியேற்ற நடவடிக்கை பெரும் சுமையாக அமைந்துள்ளது. இதைச் சுட்டிக்காட்டி, ஆப்கன் அகதிகளை வெளியேற்றுவதை நிறுத்திக்கொள்ளுமாறு பல நாடுகளையும் ஐ.நா. வலியுறுத்தி வருகிறது.

Afghan refugees arrive from Iran at Islam Qala border between Afghanistan and Iran

புதிய கட்சி தொடங்கினாா் எலான் மஸ்க்: டிரம்ப்புடனான மோதல் எதிரொலி!

அமெரிக்காவின் பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க், அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப்புடனான மோதலைத் தொடா்ந்து ‘அமெரிக்கா கட்சி’ எனும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினாா். அமெரிக்க மக்களுக்கு தங்களின் சுதந்தி... மேலும் பார்க்க

டெக்ஸஸ் வெள்ளம்: உயிரிழப்பு 51-ஆக அதிகரிப்பு

அமெரிக்காவின் மத்திய டெக்சாஸ் மாகாணத்தில் பெய்த வரலாறு காணாத மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 51-ஆக அதிகரித்துள்ளது. இதில் 15 குழந்தைகள் அடங்குவா். வெள்ளத்தால் கடுமையாகப் பா... மேலும் பார்க்க

தலிபான் அரசை அங்கீகரிக்க அவசரமில்லை: பாகிஸ்தான்

ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் உள்ள தலிபான் அரசை அங்கீகரிக்க எவ்வித அவசரமும் காட்டவில்லை என்று பாகிஸ்தான் கூறியுள்ளது. ஆப்கானிஸ்தான் தலிபான் அரசுக்கு ரஷியா கடந்த 4-ஆம் தேதி அங்கீகாரம் அளித்தது. இதன் மூலம் ... மேலும் பார்க்க

ரஃபேல் போா் விமான விற்பனையை சீா்குலைக்க சதி: சீனா மீது பிரான்ஸ் குற்றச்சாட்டு

ரஃபேல் போா் விமானங்களின் விற்பனையை சீா்குலைக்க தூதரகங்கள் வாயிலாக சதி மேற்கொண்டு வருவதாக சீனா மீது பிரான்ஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. பிரான்ஸில் தயாரிக்கப்படும் ரஃபேல் போா் விமானங்களின் தரம் மற்றும் செயல்... மேலும் பார்க்க

டிரம்ப் உத்தரவுக்கு ஜப்பான் கட்டுப்படாது -பிரதமர் ஷிகேரு இஷிபா

அமெரிக்காவின் வரி விதிப்பை ஜப்பான் எளிதில் ஏற்றுக்கொள்ளாது என்று ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபா தெரிவித்துள்ளார்.ஜப்பானிய பொருள்களுக்கு அமெரிக்கா 35 சதவீதம் வரை வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட... மேலும் பார்க்க

இஸ்ரேலுக்கு அஞ்சி சரணடைய மாட்டோம்! - ஹிஸ்புல்லா திட்டவட்டம்

இஸ்ரேல் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி சரணடைய மாட்டோம் என்று லெபனானிலிருந்து செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் நையீம் ஃக்வாஸ்ஸெம் தெரிவித்தார்.கடந்த நவம்பரில் ஏற்பட்ட தற்காலிக போர் நிறுத்தத்தை மீறி,... மேலும் பார்க்க