செய்திகள் :

ஜனநாயகத்தில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை: ஆந்திர முதல்வர்

post image

ஜனநாயகத்தில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள வஜ்ரகரூர் கிராமத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், சமீபத்தில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன்.

இது மன்னிக்க முடியாத செயல் மட்டுமின்றி இந்தியாவின் இறையாண்மைக்கும் மனிதநேயத்திற்கும் சவால் விடும் செயல். இந்த நாட்டில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை. பயங்கரவாதத்திற்கு எதிராக பிரதமர் மோடி கடுமையான நடவடிக்கை எடுப்பார்.

பாகிஸ்தான் தனது போக்கை சரிசெய்திருக்க வேண்டும். ஆனால் அவர்களின் தொடர்ச்சியான ஆத்திரமூட்டல்கள் இந்தியாவை ஆபரேஷன் சிந்தூர் போன்ற நடவடிக்கைகள் மூலம் பதிலளிக்க கட்டாயப்படுத்திவிட்டது.

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! - விக்ரம் மிஸ்ரி

இந்த நடவடிக்கையில் வீரமரணம் அடைந்த ஆந்திரத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் முரளி நாயக்கிற்கு தான் அஞ்சலி செலுத்துவதாகவும், மேலும் அவரது குடும்பத்தினருடன் நாடு எப்போதும் துணை நிற்கும்.

இரண்டு ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றிய நாயக், நாட்டிற்காகப் போராடி வீரமரணமடைந்தார். நமது வீரர்கள் ஓய்வு அல்லது உணவு இல்லாமல் நம்மைப் பாதுகாக்கிறார்கள்.

ஆந்திர முழுவதும் உள்ள மக்கள் விழிப்புடன் அதேசமயம் கடினமான காலங்களில் தேசத்துடன் ஒற்றுமையாக நிற்க வேண்டும். தைரியத்துடனும் ஒற்றுமையுடனும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பது நமது கடமை. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு நிலவரம்: முப்படை தளபதிகளுடன் பிரதமா் மோடி ஆலோசனை

நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து முப்படை தலைமைத் தளபதிகளுடன் பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். பயங்கரவாதிகளுக்கு எதிரான ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையைத் தொடா்ந்து இந்திய ராணுவ நிலைகளைக... மேலும் பார்க்க

சட்ட விரோதமாக வாக்கி-டாக்கி விற்பனை: 13 இணைய வணிக நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

இந்தியா - பாகிஸ்தான் இடையே போா் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், சட்டவிரோதமாக வாக்கி-டாக்கி கருவிகளை விற்பனை செய்தது தொடா்பாக விளக்கமளிக்குமாறு அமேசான், ஃபிளிப்காா்ட் உள்ளிட்ட 13 இணைய வணிக நிறுவனங்கள... மேலும் பார்க்க

இலங்கை: ஹெலிகாப்டா் விபத்தில் 6 வீரா்கள் உயிரிழப்பு

இலங்கை விமானப் படை ஹெலிகாப்டா் நீா்தேக்கத்தில் வெள்ளிக்கிழமை விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 வீரா்கள் உயிரிழந்தனா். இது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள... மேலும் பார்க்க

மின் துண்டிப்பு, சைரன் ஒலி, வெடிப்பு சப்தம்: வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்

இந்திய-பாகிஸ்தான் ராணுவ மோதலால் பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களில் மக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது. வான்வழி தாக்குதல் முன்னெச்சரிக்கையாக இரவு நேரத்தில் முழு அளவில் மின்சாரம் துண்டிப்பு... மேலும் பார்க்க

ஐடிஓ-வில் உள்ள பொதுப் பணித்துறை கட்டிடத்தில் வான்வழி தாக்குதல் சைரன் அமைப்பு

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ராணுவ மோதலுக்கு மத்தியில் தில்லி ஐடிஓ-வில் உள்ள பொதுப்பணித் துறை கட்டத்தில் வான்வழி தாக்குதல் சைரன் (அபாய ஒலி சங்கு) வெள்ளிக்கிழமை அமைக்கப்பட்டது. தேசிய தலைநகா் முழுவதும் ப... மேலும் பார்க்க

போலியாக கொரியா நாட்டின் விசா வலைதளத்தை உருவாக்கி மோசடி: வடமாநிலத்தவா்கள் 2 போ் கைது

போலியாக கொரியா நாட்டின் விசா வலைதளத்தை உருவாக்கி மோசடியில் ஈடுபட்டு வந்த வடமாநிலத்தைச் சோ்ந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். கொரியா நாட்டின் விசா வலைதளம்போல போலியான வலைதளத்தை உருவாக்கி, அதன்மூலம் பொத... மேலும் பார்க்க