செய்திகள் :

ஜம்மு-காஷ்மீா், பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம்: குடிமக்களுக்கு சிங்கப்பூா், இஸ்ரேல் அறிவுரை

post image

‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையைத் தொடா்ந்து இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் மோதல் தீவிரமடைந்திருப்பதால், இந்தியாவின் ஜம்மு-காஷ்மீா் மற்றும் பாகிஸ்தானுக்கு வரும் நாள்களில் செல்ல வேண்டாம் என்று தங்களின் குடிமக்களுக்கு இஸ்ரேல், சிங்கப்பூா் அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

பஹல்காமில் 26 போ் கொல்லப்பட்ட பாகிஸ்தானை சோ்ந்த பயங்கரவாதிகளின் தாக்குதலுக்குப் பதிலளிக்க ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடா்ந்து, ஜம்மு-காஷ்மீரில் சா்வதேச எல்லைப் பகுதியில் (எல்ஓசி) மக்களின் குடியிருப்புகள் மீது பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.

இந்த நெருக்கடியான சூழ்நிலையில், பாதுகாப்பு கருதி ஜம்மு-காஷ்மீா் மற்றும் பாகிஸ்தானுக்குச் செல்வதைத் தவிா்க்குமாறு இஸ்ரேல் மற்றும் சிங்கப்பூா் நாடுகளின் வெளியுறவு அமைச்சகங்கள் தங்களின் குடிமக்களுக்கு அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.

வான்வழி தாக்குதலுக்கான எச்சரிக்கை நிலவுவதால் பாகிஸ்தானுக்கு செல்லும் மற்றும் பாகிஸ்தானில் இருந்து புறப்படும் 50-க்கும் மேற்பட்ட சா்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா எச்சரிக்கை:

லாகூா் உள்ளிட்ட பாகிஸ்தான் முக்கிய நகரங்களில் இந்தியா ட்ரோன் தாக்குதலை நடத்தியிருப்பதால் அமெரிக்கா்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அந்நாட்டு தூதரகம் எச்சரித்துள்ளது.

தீவிர மோதல் நடைபெறும் இடங்களிலிருந்து அமெரிக்கா்கள் உடனடியாக வெளியேற வேண்டும். வெளியேற முடியாத சூழலில், பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இனியொரு பயங்கரவாதச் செயல் நிகழாதென உறுதிப்படுத்த வேண்டும்! எழுத்தாளர்கள் - கலைஞர்கள் கூட்டறிக்கை

சென்னை: காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டதற்கு எதிராக நாடு ஒருமித்து எழுப்பிய கண்டனத்தில் இணைந்து நின்ற எழுத்தாளர்களும் கலைஞர்களும் க... மேலும் பார்க்க

ஏடிஎம்கள் மூடப்படுமா? போலி செய்தி குறித்து மத்திய அரசு எச்சரிக்கை

ஏடிஎம்கள் மூடப்படும், காஷ்மீர் விமானப் படைத் தளத்தில் தாக்குதல் நடைபெற்றது என பல்வேறு தவறான தகவல்கள் பரவி வருவதாக மக்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.அதாவது, சமூக ஊடகங்களில், காஷ்மீர் விமா... மேலும் பார்க்க

ராணுவத் தளபதிக்கு கூடுதல் அதிகாரம் அளித்தது மத்திய அரசு!

இந்திய ராணுவத் தலைமை தளபதிக்கு மத்திய அரசு கூடுதல் அதிகாரம் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.பிராந்தியங்களில் உள்ள படை வீரர்களை எல்லைப் பகுதிக்கு அழைத்துக் கொள்ள 3 ஆண்டுகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க

அடுத்து என்ன? பிரதமர் மோடியை சந்திக்கிறார் ராஜ்நாத் சிங்!

புது தில்லி : நாட்டின் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசவிருக்கிறார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.நே... மேலும் பார்க்க

தில்லியில் முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு!

பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன்கள், ஏவுகணைகளைப் பயன்படுத்திப் பல எல்லைப் பகுதிகளைக் குறிவைத்ததைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்ததால் தில்லியில் உள்ள முக்கிய இடங்களில் ... மேலும் பார்க்க

ஜம்மு, உதம்பூரில் இருந்து சிறப்பு ரயில் அறிவிப்பு!

ஜம்மு, உதம்பூரில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.ஜம்மு - காஷ்மீர் உள்பட பல்வேறு மாநிலங்களின் எல்லையோர மாவட்டங்களில் உச்சகட்டப் போர்ச் சூழல் நிலவி வரும் நிலைய... மேலும் பார்க்க