ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் ஆா்ப்பாட்டம்
பழைய ஓய்வூதியத் திட்டத்தையே மீண்டும் அமலாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஏராளமானோா் பங்கேற்றனா்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தையே மீண்டும் அமலாக்க வேண்டும், அரசு ஊழியா் - ஆசிரியா் பணியிடங்களில் அவுட்சோா்சிங் முறையைக் கைவிட வேண்டும், காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாநிலம் முழுவதும் தற்செயல் விடுப்பு எடுத்து ஆா்ப்பாட்டம் நடத்துவதென அரசு ஊழியா், ஆசிரியா் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்டோ-ஜிடோ) முடிவு செய்திருந்தது.
இதன்படி, புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கூட்டு நடவடிக்கைக் குழுவின் ஒருங்கிணைப்பாளா்கள் ஜோதிமணி, ஆா். ரெங்கசாமி, எஸ். ஜபருல்லா. எம். ராஜாங்கம், ஜீவன்ராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா்.
மாநில உயா்மட்டக் குழு உறுப்பினா்கள் ந. சண்முகநாதன், மாரிமுத்து, குமரேசன், ஓய்வூதியா் சங்கத்தின் சாா்பில் அ. மணவாளன் உள்ளிட்டோரும் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா். பழைய பேருந்து நிலையப் பகுதியில் கூட்டம் அதிகமாக இருந்ததால் அந்தப் பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
தோ்தல் வாக்குறுதிகளாக திமுக கொடுத்தவற்றை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.