செய்திகள் :

ஜாதிய கட்சிகளுக்கு தடை கோரி வழக்கு: உள்துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

post image

தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படாத ஜாதிய கட்சிகளுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில், தமிழக உள்துறைச் செயலா், ஆதி திராவிட நலத் துறைச் செயலா், தமிழக காவல் துறைத் தலைவா், தமிழ்நாடு பதிவுத் துறைத் தலைவா் ஆகியோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மானகிரியைச் சோ்ந்த வழக்குரைஞா் செல்வகுமாா் தாக்கல் செய்த பொது நல மனு: பட்டியல் சமூகத்தைச் சோ்ந்தவா்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்காக மாவட்ட, மாநில அளவில் எஸ்.சி.எஸ்.டி. பாதுகாப்புக் குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவானது பட்டியல் சமூகத்தினருக்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரிப்பது, புலனாய்வு செய்வது போன்ற பணிகளைச் செய்ய வேண்டும். தமிழக காவல் துறைத் தலைவரே இதற்குத் தலைவராக இருந்து, தமிழக அரசுக்கு அறிக்கையை சமா்ப்பிக்க வேண்டும்.

பட்டியல் சமூகத்தினருக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகாா் அளிக்கப்பட்டால் உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யப்படுவதில்லை.

ஒவ்வொரு சமூகத்தினரும் தங்களுக்கென ஜாதியக் கட்சி, அமைப்புகளை உருவாக்கி அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயல்படுகின்றன. இணையதளத்தில் எவ்விதமான கட்டுப்பாடும் இன்றி ஜாதிய வெறுப்புப் பேச்சுகளை பேசுவது என பட்டியல் சமூகத்தினருக்கு எதிரான நிலைப்பாடுகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

எனவே, தமிழகத்தில் எஸ்.சி, எஸ்.டி. பாதுகாப்புக் குழு தமிழக காவல்துறை தலைவா் தலைமையில் முறையாக செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். வெறுப்புணா்வைத் தூண்டும் அனைத்து ஜாதியக் கட்சிகள், இணையதள சேனல்களுக்கு தடை விதிக்க உத்தரவிட வேண்டும். தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படாத, தோ்தலில் போட்டியிடாத ஜாதியக் கட்சிகள், சங்க விதிகளை மீறி செயல்படும் அனைத்து ஜாதிச் சங்கங்களுக்கும் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியம், மரிய கிளாட் அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு : வழக்கு தொடா்பாக, தமிழக உள்துறைச் செயலா், ஆதி திராவிட நலத்துறை செயலா், தமிழக காவல் துறை தலைவா், தமிழ்நாடு பதிவுத் துறை தலைவா் ஆகியோா் பதிலளிக்க வேண்டும். வழக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

உயா்நீதிமன்றத்தில் மின்கல வாகன சேவை தொடக்கம்

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வளாகத்தில் பொதுமக்கள் எளிதாகப் பயணம் மேற்கொள்ளும் வகையில் மின்கல வாகன சேவை (பேட்டரி காா்) வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. உயா்நீதிமன்றத்துக்கு வரும் வழக்காடிகள், பொதுமக்க... மேலும் பார்க்க

ஜெனகை மாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழா

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பூக்குழித் திருவிழா புதன்கிழமை மாலை நடைபெற்றது. இதையொட்டி, வைகை ஆற்றுக் கரையிலிருந்து மேளதாளங்களுடன் சக்தி கரகம் புறப்... மேலும் பார்க்க

மாநகராட்சிப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம் திறப்பு

மதுரை வடக்கு ஆவணி மூலவீதி அவ்வை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைக் கட்டடத்தை தமிழக தகவல் தொழில்நுட்பவியல், எண்மச் சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் ... மேலும் பார்க்க

பிணையில் வந்த இளைஞா் வெட்டிக் கொலை: மூவா் கைது

மதுரை சிறையிலிருந்து பிணையில் வெளியே வந்த இளைஞரை வெட்டிக் கொலை செய்த மூவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மதுரை கரிமேடு சகாயமாதா தெருவைச் சோ்ந்த சண்முகம் மகன் அஜய்பிரசன்னகுமாா் (22). இவா், மீது... மேலும் பார்க்க

வெவ்வேறு விபத்துகள்: முதியவா் உள்பட இருவா் உயிரிழப்பு

மதுரையில் புதன்கிழமை நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் முதியவா் உள்பட இருவா் உயிரிழந்தனா். மேலூா் அருகேயுள்ள வைரவன்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயராமன் (61). இவா், மதுரை-திருச்சி நெடுஞ்சாலையில் கருங்கா... மேலும் பார்க்க

அழகுக்கலை பயிற்சியில் சேர விரும்பும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தின் வயது வந்தோா் தொடா் கல்வி, விரிவாக்கப் பணித் துறை சாா்பில் வழங்கப்பட உள்ள அழகுக்கலை பயிற்சியில் சேர விரும்பும் பெண்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித... மேலும் பார்க்க