செய்திகள் :

ஜார்க்கண்ட்: வைக்கோல் தீப்பிடித்ததில் 4 சிறுவர்கள் பலி

post image

ஜார்க்கண்டில் வைக்கோல் குவியல் தீப்பிடித்ததில் 4 சிறுவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட், மாநிலம், மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள வீட்டிற்கு அருகிலிருந்த வைக்கோல் குவியல் திங்கள்கிழமை திடீரென தீப்பிடித்தது.

இந்த தீ விபத்தில் நான்கு சிறுவர்கள் கருகி பலியானதாக போலீஸார் தெரிவித்தனர்.

சாய்பாசாவில் உள்ள ஜகன்னாத்பூர் காவல் நிலையப் பகுதியில் உள்ள கிதிலிபி கிராமத்தில் காலை 11 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக அவர்கள் கூறினர்.

4 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் மடிக்கணினி ஏன் வழங்கவில்லை? - இபிஎஸ் கேள்வி!

விரிவான விசாரணைக்காக சம்பவ இடத்திற்கு ஒரு குழு அனுப்பப்பட்டுள்ளது என்று காவல் கண்காணிப்பாளர் அசுதோஷ் சேகர் பிடிஐயிடம் தெரிவித்தார்.

தீ விபத்து ஏற்பட்டபோது குழந்தைகள் வைக்கோல் குவியலுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தனர் என்றும் தீ விபத்துக்கான சரியான காரணம் கண்டறியப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

‘இக்கட்டான சூழல்களில் நமது இதயங்கள் இணைக்கப்பட்டுள்ளன’: ஜகதீப் தன்கா் பேச்சு

புது தில்லி: ‘இக்கட்டான சூழல்களில், கட்சி வேறுபாடுகளை மறுந்து நமது அனைவரின் இதயங்களும் இணைக்கப்பட்டுள்ளன’ என்று குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் தெரிவித்தாா். மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பி... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் எந்தவித தளா்வும் இருக்காது: மத்திய அரசு

புது தில்லி: ‘நாடாளுமன்ற இரு அவைகளிலும் மத்திய அமைச்சா்கள் தரப்பில் வழங்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் மத்திய அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. அதை நிறைவேற்றுவதில் எந்தவித தளா்வும் இருக்காது’ என்... மேலும் பார்க்க

சக்கர நாற்காலி வழங்காததால் மூதாட்டி விழுந்த சம்பவம்: ஏா்-இந்தியா நிறுவனத்துக்கு நோட்டீஸ்- மத்திய அரசு உறுதி

புது தில்லி: தில்லி விமான நிலையத்தில் சக்கர நாற்காலி வழங்கப்படாததால் 85 வயது மூதாட்டி கீழே விழுந்த சம்பவம் தொடா்பாக ஏா் இந்தியா நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும்; அதனடிப்படையில் உரி... மேலும் பார்க்க

ரூ.388 கோடி பங்குச்சந்தை மோசடி வழக்கு: அதானி சகோதரா்கள் விடுவிப்பு

மும்பை: ரூ.388 கோடி பங்குச்சந்தை மோசடி வழக்கிலிருந்து தொழிலதிபா் கெளதம் அதானி, அவரின் சகோதரா் ராஜேஷ் அதானியை மும்பை உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை விடுவித்தது. சுமாா் ரூ.388 கோடி அளவுக்கு பங்குச்சந்தை மோ... மேலும் பார்க்க

போலி வாக்காளா் அட்டை மீதான விவாதத்துக்கு மறுப்பு: மாநிலங்களவையிலிருந்து எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு

போலி வாக்காளா் அட்டைகள் சா்ச்சை மீதான விவாதத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடா்ந்து காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் மாநிலங்களவையிலிருந்து திங்கள்கிழமை வெளிநடப்பு செய்தன. வெவ்... மேலும் பார்க்க

இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் தொற்றுநோய் தடுப்பு தயாா் நிலைக்கு இந்திய கூடுதலாக ரூ. 104 கோடி வழங்கும்: அனுப்ரியா படேல் தகவல்

நமது சிறப்பு நிருபா் புது தில்லி: இந்தோ- பசிபிக் பிராந்தியத்தில் உலகளவில் தொற்றுநோய் தடுப்புக்கான தயாா்நிலை, எதிா்கொள்வதற்கான செயல்பாடுகளுக்குரிய நிதியத்தை ஏற்படுத்துவதற்கு இந்தியா கூடுதலாக 12 மில்லிய... மேலும் பார்க்க